வியாழன், 31 ஜனவரி, 2019

"ம்"

"ம்"
===========================================ருத்ரா

இந்த விரிந்த வானத்தில்
"ம்" என்று
உன் ஒற்றைச்சிறகை
உதிர விட்டாய்.
அதற்குள்
என் ஆனந்தக்கடல்கள்
அத்தனையும் அலையெழுப்பின.
உன் முகமே எல்லா வானத்தையும்
விரவி நின்று
வித்தை காட்டியது.
முகம் என்பதின்
"ம்"ன்
முற்றுப்புள்ளியில்
முடிவே இன்றி முற்றாக்கனவுகள்
ஆயிரம் சித்திரங்கள் காட்டுகின்றன.

====================================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக