செவ்வாய், 15 ஜனவரி, 2019

மின்னற்பீலிகள் (8)

மின்னற்பீலிகள் (8)
======================================ருத்ரா


சன்னல் அருகே வந்து வந்து
நின்று விட்டு போகிறாய்.
இப்பொழுது புரிந்தது
ஏன் நிலவில்
கம்பி கம்பிகளாய்
நிழல் விழுந்திருக்கிறது என்று!

-------------------------------------------------------------

கொலுசு என்று பெயர்
யார் வைத்தார்கள்?
அது போகும் தடம் எல்லாம்
என் இதயம் உடைந்து
சிதறுகின்றதே.
உன் கொலுசு என்ன
என் இதயத்தின் காயலாங்கடையா?

-------------------------------------------------------------------


உன் மல்லிகைசரம்
என் ஜெபமாலையானது!
உன் காதோரம்
ஒவ்வொரு பூவிலும்
உன் பெயரை நான் உச்சரிப்பது
உனக்கு கேட்கவில்லையா?

----------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக