வியாழன், 24 ஜூலை, 2025

மூளை எனும் அணுகுண்டு

 

If AI attempts to take over world, don't count on a 'kill switch' to save humanity



மூளை எனும் அணுகுண்டு

_________________________________


இந்த மூளையே ஏஐ எனும் 

ஒரு உள் மூளையை

கண்டு பிடித்தது.

அது மூல மூளைக்குக்கட்டுப்படாமல்

"காட்டாற்று மூளையாக"

பெருக்கெடுத்து ஓடுகிறது.

மனிதன் தன் அழிவு விதையை

ஊன்றி விட்டான்.

"அறிவு விதை" எப்படி அழிவு விதை

ஆயிற்று?

கடவுள் பயம் காட்டினார்கள்.

அரசு ஆதிக்க பயம் காட்டினார்கள்.

ராணுவம் என்றார்கள்.

சைபர் போலீஸ் என்றார்கள்.

குவாண்டம் சிப் எனும்

அந்த "ஹை ஸ்பீட் கணித "மான்ஸ்டர்"

இப்போது ஒரு அடங்காத பூதம்.

பழைய பூதத்தின் கதையில்

அதை அடக்க ஒரு வேலை கொடுத்தானாம்

அந்த பூதத்தின் "எஜமானன்"

அதோ அந்த நாயின் சுருண்ட வாலை

நிமிர்த்து என்றானாம்.

பூதம் தோற்று ஓடிப்போயிற்றாம்.

சரி

நாமும் அப்படி நாய் வால் நிமிர்த்து

என்று ஏவலாம் என்று

ஏஐ ய்யை ஏவினேன்.

நான் ஏவி முடிப்பதற்குள்

அது டி என் ஏ ஆர் என் ஏ கோடுகளையே

(கோடிங்க் அல்காரிதம்)

மாற்றிக் கொடுத்து விட்டது.

இப்போது அந்த நாயின் வால்

விறைத்த வாள் போல் நின்று

என் மூக்கிற்கு நேரேயே

கூர் தீட்டிக்கொண்டிருக்கிறது.

மூளை தந்த அந்த "ஏ ஐ"

அணு குண்டு 

வெடிக்க காத்திருக்கிறது?!!

___________________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக