ஞாயிறு, 20 ஜூலை, 2025

அகழ்நானூறு 100"

 

அகழ்நானூறு 100"

_________________________________

சொற்கீரன்


கறை அணற்சேவல் மனைஉறைக் குரீஇ

வரிச்சிறை வாரணம் பேடையோடு தழீஇ

நொச்சிக்குரல் அன்ன ம்யில் பீலி சூடிய‌

மயிர்க்கண் முரசம் அதிரொலி அயர்ந்து

வெளிப்பட துணியா வெஞ்சமர்க் காலை

ஆரிலை வெஃகம் ஏந்தல் மறவர்

ஆறலை அஞ்சுரம் ஆறுபடுத்த போழ்தின்

நெடு ஒலி மலியும் இஞ்சிசேர் ஊர!

நின் வாணுதல் பொறியும் பூத்த பசலை

மயக்குறு செய்யும் கொடுஞ்செயல் தவிர்மதி

நின் கொய்சுவல் நுண்மா கதழ்பரி கலித்தே

விரைமதி பூழிபடர் வழியும் நன்றே எதிர்தரும்

உதுக்காண் அவள் வளைஇறை நெகிழ்தர

இழியும் சுடுவிழி அஞ்சிறை நீரே.

_________________________________________________

சொற்கீரன்


(புறம் 318 பெருங்குன்றூர் கிழார்) Source

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக