("மாற்பித்தியார் 252..புறம்) source.
அகழ்நானூறு "99"
_____________________________
தில்லை அன்ன புல்லென் சடையோடு
வரிமரம் தழீஇ வழங்கு நீடிலைக் கண்ணே
புள்ளி நீழல் பொறி மூசு கழையின்
அடுக்கம் சிலம்பிய வேடுவன் எய்யா
மறை அம்பு தீண்டிய கூர்ங்கண்
கொல்லிய மலை கிழவோன் மள்ளன்
சொல்வலை வேட்டுவன் ஒலிகிளர் மாலை
மயக்கிய தென்னே நோன்றல் ஆற்றா
மணிநிற முன்றில் நொச்சிக்குரலின்
மெல்லிய படுகை என் இறைவளை
நெகிழ்த்தும் நெகிழ்த்தும் யான்
எற்றைத்திங்கள் எரிவெள் நிலவு
அனல் படும் தண்ணினும் நீர்த்தே
அளியள் யானே விழிநீர் போர்த்து
கறங்கும் வெள்ளிய அருவியின் ஆர்த்தே.
__________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக