சனி, 31 மே, 2025

அகவை எண்பத்தி மூன்று..

 

அகவை எண்பத்தி   மூன்று..

___________________________________


என் சன்னலில் வந்து

அது கூவிற்று.

ஆம் அகவியது.

என் அகவை எண்பத்தி மூன்று..

என இதோ

இந்த‌ நானோ செகண்டில்

துவங்கி விட்ட து என்று...

காலப்பறவையே!

வருக!வருக!

உனக்கு என் வாழ்த்துக்கள்!

உன்னை

பிறந்த நாள் எனும் வலையெல்லாம்

வீசிப் பிடிக்க முடியாது

எனும் எட்டாத ஒரு வானத்தில் 

இருந்து கொண்டே

இப்படி அகவுகின்றாயே!

அந்த எல்லையின்மைக்கு என் 

வாழ்த்துக்கள்!

"அட! நீயும் இப்படி எல்லாம்

என்னைக் கிண்டல் செய்யாதே.

நம்"ப்ளாங்க்" எல்லையைத்தான்

இல்லை என்று ஆக்கி

கோட்பாடு சொல்லத்துவங்கியிருக்கிறதே

இந்த "ஜே டபிள்யூ எஸ் டி" எனும்

தொலை நோக்கி.

அது ஒரு சம்மட்டியைத்தூக்கிகொண்டே

அலைகிறதே.

அதில் இந்த "கால வெளி"க் கோடு

சுக்கு நூறாகிக்கொண்டிருக்கிறதே!"

சரி! சரி!

கவலைப்படாதே.

உன் பிறந்த நாள் வாழ்த்து அட்டையை

ஒரு "தங்கப்பால்" மையில் 

நனைத்து அச்சடித்து ஆகி விட்டது.

நீ வாழ்க!

நீடூழி நீடூழி நீ வாழ்க!


_________________________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக