தேன் கூட்டில் ஒரு கல்
__________________________________
வில் எறிந்தாரா?
கல் எறிந்தாரா?
தமிழை வைத்து
தமிழ் மீதே
கணை தொடுத்தாரா?
தமிழ் தென்னிந்தியாவில்
ஒரு ஜனநாயக்கட்டமைப்பில்
ஒரு அரசியல் அம்பை
கூர் தீட்டிக்கொண்டிருக்கும்போது
அதை மழுங்கடித்து விட
"செல்லமாய்" ஒரு விளையாட்டு
ஆட நினைத்தாரா?
இது அவர் பாணி.
தமிழில் ஒரு பழமொழி உண்டு.
பாம்பு என்று தாண்டவும் முடியாது.
பழுது என்று மிதிக்கவும் முடியாது.
இப்படி ஒரு
தந்திரமான வில்லும் அம்பும்
எப்போதும் அவரிடம் உண்டு.
இன்று கன்னடம்.
நாளை தெலுங்கு.
அப்புறம் மலையாளம்
இது போதுமே.
இனி தமிழ் நாட்டில்
அனுமன் சாலிஸாக்கள்
பாட ஆரம்பித்து விடுவார்கள்.
"மோர் லாயல் தேன் தி கிங்க்"
என்று
ஒரு தமிழ் நாடக அரசியல் ஆடுகிறாரோ
என்ற
ஐயம் நமக்கு அரும்பியிருக்கிறது.
அவர் சட்டைப்பைக்குள்
இப்படி சீமானையும் விஜய்யையும்
ஒளித்து வைத்துக்கொண்டிருக்கிறாரா
என்று தெரியவில்லை.
அந்த எம் பி சீட்டுக்கு
நான் கூலி கொடுத்துவிட்டேன் என்று
ஒரு ஜனநாயக தமிழ் இயக்கத்தேன் கூட்டை
கல் எறிய நினைத்தாரோ?
இதே கல் சமஸ்கிருதத்தின் மீது தான்
எறியப்பட வேண்டும்.
இதை கமல் செய்யவேண்டும்.
செய்வாரா?
இதையும் செய்வார்.
அது அவர் பாணி.
ஆனால் நமக்கு
மீண்டும் ஒரு சுதந்திரப்போர்
நடத்தியாக கட்டாயம் இருக்கிறதே.
அதற்குள் பாருங்கள்
சித்தராமய்யாவை சீற வைத்து விட்டார்.
அந்த "காவி(ய)த்தலைவருக்கு"
எறிந்த கல்...
என்று இவர் நழுவிப்போக முடியுமா?
"சபாஷ் மீனா" போல்
அந்த கண்ணாடிச்சன்னலில்
கல்லெறிந்து ஒரு
அரசியல் விளையாட்டை
துவக்கி இருக்கிறாரோ
என்று எண்ணத்தோன்றுகிறது.
ஸ்டாலின் அவர்களே.
மக்களிடம் நீங்கள் கரும்பு மனிதர் தான்.
இரும்பு மனிதர் எனும்
அரிதாரம் மறுத்து
மனித நேய அரசியலை
மனதோடு அன்பின் அம்பாய்
கூர்மை படுத்தும் வேளை இது.
கூடு கலைய
விட்டு விடாதீர்கள்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு எனும்
வழக்கமான சொற்கூட்டத்தோடு
"கவனம்" என்ற
கட்டுக்கோப்பும் உங்கள்
கவசத்தை கலைய விடாமல்
பார்த்துக்கொள்ளுங்கள் என்று
இந்த
தமிழும்
தமிழினமும்
உங்களிடம் கேட்டுக்கொள்கிறது.
_________________________________________
சொற்கீரன்.
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக