இன்று போய் நாளை வா
_________________________________________
இன்று போய் நாளை வா
என்றானாமே!
ஆம் நாளை பார்ப்போம்.
நான் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
எதற்கு இந்த
பொம்மை விளையாட்டு?
அரசன் என்றால்
மக்களை அடக்கியே வைத்திருக்கவேண்டும்.
புருசன் என்றால்
அவனிடம் சந்தேகத்தின்
ஆயிரம் கண் முளைத்திருக்க வேண்டும்.
குரு என்றால்
குருட்டு வட்டம்
போட்டுத்தரவேண்டும்.
என்ன கேட்டாய்
கடவுள் என்றால் எது அல்லது யாரா?
போதும் நீ
படிக்க வந்தது.
பிடி சாபம்.
அச்சமூட்ட ஆரம்பிக்கிறது கடவுள்.
என்ன கனமான
வேடம் இது?
அவன் அதைப்பிய்த்து
தூர எறிகிறான்.
ஆம் அந்த "அவதார"வேடத்தை.
ஆறுகள் ஓடுவது போதாதா?
கடல்கள் கரை உடைத்துப் பொங்குவதும்
போதாதா?
ஏன் இந்த ரத்தப்பசி?
இப்போது புரிந்து கொண்டேன்.
வேறு
அறிவுப்பசி எடுத்துவிட்டால்
நீ
"கல்"எடுத்து விடுவாய்.
உன் அறியாமை மூட்டத்தில்
வீசி எறிய!
அது கல் என்று
"பகுதி" என்று
உறுப்பிலக்கணம் சொல்கிறது
தமிழ்!
ஆம்!"கல்வி"
எதுவென்று?
என்ன வென்று?
யார் என்று கேள்?
எப்படி என்று கேள்?
ஏன் என்று கேள்?
இந்த முதல் கல் எறிபவனே
மனிதன்.
அவனே
இறைவனுக்கெல்லாம்
இறைவன்!
மனிதன் மட்டுமே இங்கு
வெளிச்சம்.
மற்ற இருட்டு மந்திரங்கள்
எல்லாம்
சாம்பலாக்கப்பட
ஓ மனிதா
நீ எழுந்து வா!
நீ வில்லன் அல்ல!
நீயே விளக்கு!
நீயே கோவில்!
வில்லையும் அம்பையும்
தூர எறிந்து விட்டு
அது தன்
வேடத்தைக்கலைத்துக்
கொண்டது!
________________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக