அந்த வரலாற்றுக்
குப்பைத்தொட்டியில்
ரத்தம் ரத்தம் சொட்ட சொட்ட
விழுந்து கிடக்கின்றன
இரண்டு தலைகளாய்...
அம்பிகாபதி
அமராவதியாய்..
மயிர்ப்பிசுறுகளும்
மயில் பீலிகளும்
கவிதைகள் தான்
எழுத முடியும்.
உளுத்த சமுதாயத்தின்
உள் வெறிகள்
ஒழிக்கப்படாமல்
மிச்சம் இருப்பதால்
இந்த குப்பைகளுக்கே
காதல்
குட்பை
சொல்லிக்கொண்டிருக்கின்றன.
_____________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக