ஒரு கடமுடா கணிதம்.
________________________________.
"க்ராஸ்ஸ்மென் அல்ஜிப்ராவும்
ஒரு கோ ஹோமாலஜியும்..."
இதுவும் ஒரு
கணித ஆராய்ச்சித்தலைப்பு தான்.
க்ரோகி 3 யோ
இல்லாவிட்டால் கூகிளின் வில்லோவையோ
அல்லது
எம் எஸ்ஸின் "மஜரோனாவையோ
தட்டிக்கேட்டால்
"தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற
சுக சங்கீதத்துடன்
நம் "பிரபஞ்சம்"
ஆயிரம் தலைப்பூதமாய்
காட்சி தரும்.
குவாண்டம் மந்திரக்கோலில்
பில்லியன் பில்லியன்
சூன்யக்கார தேவதைகள்
சிறகு விரித்துக்கொண்டு
காத்திருக்கும்.
இயற்கை மூளையை
கடவுள் படைத்தான் என்றால்
அந்த மூளையையும் கடவுளையும்
சேர்த்துப்படைக்க
மனிதன் வந்திருக்கிறான்.
ஆம்.
விஞ்ஞான மனிதன்...
கணித விஞ்ஞானி..
யாரப்பா அந்த விஞ்ஞான மனிதன்?
கனவில் வருவதாயிருந்தால்
ராமானுஜனின்
அந்த நாமக்கல் பெண்தெய்வத் தாயாராய் கூட
இருக்கலாம்.
அதைப்பற்றி நமக்கு கவலையில்லை.
இந்த கடமுடா முறுக்கைக்கடித்துப்பார்க்கலாம்.
பல்(ஸ்) ஜாக்கிரதை.
______________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக