செவ்வாய், 13 மே, 2025

"அங்கே எனக்கோர் இடம் வேண்டும்"





"அங்கே எனக்கோர் இடம் வேண்டும்"
_______________________________________________

டிஜிடல் குப்பைகள்...க்யூபிட் கூளங்கள்
ஏவுகணை எச்சங்கள்.
கோடி கோடி ஆண்டுகள்
கழித்தும் கண்டுபிடிக்கப்பட முடியாத‌
சூப்பர் கம்பியூட்டர்களின்
கணித சமன்பாடுகளை
ஒரு வினாடியின்
கோடி கோடி பங்கு காலத்துளியிலேயே
கொப்புளித்து விடுகின்ற‌
குவாண்டம் கம்பியூட்டர்களின்
மிச்ச சொச்ச க்யூபிட் குப்பைகள்...
என்ன?
அவ்வளவு விஞ்ஞானங்களும்
குப்பைகளா?
ஆம்.
இவற்றிற்கு இங்கு இடமில்லை.
இதற்கு 
ஒரு "ட்ராஷ் பின்"வேண்டுமென்று
இந்த பிரபஞ்சம் முழுதும்
அலைந்தது தான் மிச்சம்.
அது தான்
"பல் மடங்குப்பிரபஞ்சம்"
(மல்டிவெர்ஸ்) இருக்கிறதே
என்று
ஆறுதல் கொள்ள முடியாது.
இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல்
முழுவதையும் 
எரிபொருள் ஆக்கிய‌
ஏவு கணை ஒன்றையல்லவா
கண்டுபிடிக்க வேண்டும்?
குப்பை கொட்டியது போதும்.
விஞ்ஞானமாவது வெண்டைக்காயாவது?
மனிதனே..
இந்த கற்பனை முட்டுச்சந்து
உன்னை 
கலங்கடிக்க விட்டு விடாதே!
உன் அறிவுக்குள்
கோடிக்கோடி அண்டங்கள்
கூடு கட்டியுள்ளன>
உன் சிந்தனைச்சிறகு மட்டும்
"பற பற"த்துக்கொண்டே இருக்கட்டும்.
தளராதே!
தயங்காதே!
படி..படி..படி
பற..பற..பற.

_____________________________________
சொற்கீரன்.

(திடீரென்று நம் கணினிகள் எல்லாம்
இருட்டி விட்டால் என்ன செய்வது
என்று ஒரு கட்டுரை படித்ததன்
விளைவே இந்த கவிதை)
_______________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக