வியாழன், 8 மே, 2025

நெடுநெல் வாடை


நெடுநெல் வாடை

______________________________________‍



கல்லிடைக் குறிஞ்சி மண்மிடைப் பவளம்

அன்ன நீடு அணிநிரல் செவ்வூர்

பொதிகை பொத்திய பொன்றுளி யாறு

பொருநை தழீஇய செம்பொன் எல்லின்

விழி விதிர்த்த காலை வியன் உலகு விரிய‌

பசும் பைந்நெல் பசிய காண்பு

பல்லோர் வியத்த பைம்பொழில் சூழ்

பழனப் பரவை எழில் செறு ஊர‌

ஆறலை பெயர்வார் ஆங்கே உறைவார்.

பொன் துறை பரவிய அதர் மணல் கீறும்

கள்வன் குஞ்சும் வரி எழுதும் கோலம்

கோடு குழூஉம் பச்சைக்கோரை

நுடங்கு தரு கவின்கூர் கண்ணின் நிரைப்ப‌

சிறுமீன் உகளும் திவலை மணிநீர்

கதிர்வலை ஏய்க்கும் பாய்ச்சல் நுரையொடு

கடுகின் விழியூடு நீர் அரவும் விரையும்

நெளி தரு காட்சிகள் மலியும் மலியும்.


(தொடரும்)


______________________________________________________

சொற்கீரன்.


(இது எங்கள் ஊர் கல்லிடைக்குறிச்சியின் 

பொருநை யாற்றுப்படை ஆகும்.

பசுமை நிறைந்த வயல்கள் சூழ்ந்த‌

ஊரின் எழில்வளம் பற்றிய எனது

சங்க நடைச்செய்யுட் கவிதைப்பாடலே இது.)


________________________________________________________






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக