அகழ்நானூறு 96
_____________________________________________
வளை சிறை வாரணம் வானம் எய்ய
வீழும் வீழும் வெண் தரை மிசையே.
ஆயிரங்கண் பீலி கொண்டன்ன
வான் கோழி ஓவு பயில் உருகெழு
ஒண்ணிய காட்டின் புல்லென் காட்சி
புனத்தொடு இழையுமாப்போல
அவன் ஆங்கு வாரா மயக்கம்
மெய்யே போன்ம் பொய்மை காட்டும்.
உயர் சிமை வாங்கு முதிர் கழை ஆடும்
முற்றிய பெட்பு முளிபுரை ஊட
திங்கள் பிஞ்சின் வரிநிழல் வெறீஇ
மின் இழி நுண் சிறை அம்தும்பி
பூசல் புரியும் வெள்ளிய பானாள்
அஃதிடை அவனும் ஒளிஒளி காட்டி
ஓவா கொல்முகை புல்லிய கீற்றின்
ஊற்றொடு பெயரும் என்று வருங்கொல்
என்றே நோன்றாள் நீள்விழி கசிந்தாள்.
___________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக