சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
சினிமா செட்டிங்குகளே
நம் வரலாறுகள்
ஆகிப்போனதில்
காலம் நம்மை
மிதித்துக்கூழாக்கிப்
போனதே மிச்சம்!
வெயிலுக்கு நிழல்கள்
தேடி போவதற்குப்பதில்
இன்னும் இந்த
சுட்டெரிக்கும் வெயில்களே
நமக்கு நிழல்கள்.
________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக