சொற்கள் அல்ல அவை.
__________________________________
அவை
எங்கிருந்து வருகின்றன?
இலக்கணம்
உமிழ்ந்தவை அல்ல.
இலக்கிய மயிர்பீலிகள்
வருடும்
கனவு விலாக்களின்
கிச்சு கிச்சு மூட்டல்கள்
அல்ல.
"எழுச்சி கொள்!
தூங்கிய கந்தல் நூற்றாண்டுகளை
தூக்கி எறி.
அடிமைத்தன
அழுத்தங்களை
உடைத்து எறி."
சொற்கள் அல்ல அவை.
உன் உள்ளத்து அடியில்
கனன்று இருக்கும்
அந்த லாவாக்களின்
மூச்சுப்பிஞ்சுகள்!
விடியல் விடியல்
என்று
கூவிக்கொண்டிருக்கும்
குயில்களின்
அக்கினிச்சிறகுகள்
அவை!
________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக