ஒரு சொட்டுக் கண்ணீர்த்துளி!
உலகத்துக்கண்களின்
இந்த கண்ணிர்த்துளிகளையெல்லாம்
சேர்த்தால்
கடல் கொள்ளுமோ?
துன்ப துயரங்கள்
மக்களின் மனதுக்குள்
இப்படித்தான் பூத்து வழிகின்றன.
"ஆனந்தக்கண்ணீர்"
என்றும் அவ்வப்போது
கவிதைத்தனமாய்
சொல்லிக்கொண்டு
உணர்ச்சிப்பிழம்பில்
கரைந்து போவது உண்டு.
"செல்வத்தை தேய்க்கும் படை"
என்று சீறினானே வள்ளுவன்
அந்த அல்லல் பட்ட
அமிலத்துளிகள்
சுட்டுப்பொசுக்கிவிடும்
அந்த அறமற்ற கொடுமைகளை!
இப்படியும் கூட
மாறும்..எல்லாம் மாறும்
என்று
நமக்கு நாமே
போதை ஊசிகள்
ஏற்றிக்கொண்டே தான்
இருக்கிறோம்.
அந்த தேர்ச்சக்கரத்தின்
அடியில்
நாமே கீழே கோடி கோடி மக்களாய்
அநியாயமாய்
நசுங்கி நாசமாய்க்கொண்டிருப்பதும்
அறியாதவர்களாய்
அந்த "சம்பவாமி யுகே யுகே" வைக்
கேட்டுக் களித்து
கூத்தாகிறோமே!
இந்த தற்குறித்தனத்தில்
மூழ்கிக்கிடக்கிறோமே!
கண்ணீர்ப்பூச்சிகளே.
அந்தக் கண்ணீரின் உப்பு கூட
கொஞ்சமாவது உங்களுக்கு
சூடு சொரனை ஏற்றாதா?
விழியுங்கள்.
விழிவே உங்கள் விடிவு!
_________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக