தமிழா! தமிழா!! தமிழா!!!
_________________________________
உனக்குத்தான் இந்த அழைப்பு?
திருப்பி திருப்பி
தமிழா! தமிழா!! என்று
கூப்பிட்டா
இழிவா படுத்த வேண்டும்?
நான் தமிழனே இல்லையா?
ஆமாம்.
நீ பிறந்த போது
நீ வந்த தருணங்களை
வீர முரசு கொட்டி
விழா எடுப்பதற்குப்பதில்
உனக்கு
நாக்கை சுருட்டி
அடிவயிற்றை
கசக்கிப்பிழிந்து
ஒரு சமஸ்கிருத உச்சரிப்பில்
உனக்கு நாமகரணம்
செய்ய வேண்டும்.
தமிழ் மணத்தோடு பிறந்திருக்கிறாய்
அல்லவா
அந்த தீட்டுக்கழிக்க
மந்திரங்கள்!
உனக்கு காது குத்தி
மொட்டை அடித்து
அழகு பார்க்கும்போதும்
மந்திரம் தான்.
இன்னும் நீ
உன் வாழ்க்கையில்
படி படியாக ஏறும்போதும்
மந்திரம் தான்.
உன் அப்பன் ஆடு மாடு
மேய்த்திருப்பான்.
அவன் பிள்ளை நீ
ராக்கெட் இஞ்சினீயரிங்க்
படிக்கலாமோ?
அதற்காக
மூணாவது அஞ்சாவது எட்டாவது
வகுப்பு வரை
படித்தால் போதம்.
படிப்பதற்கு என்றே
இங்கு பிரம்ம கோத்ரம்
பிறந்தவாளே இருக்காளே
அவாளே
எல்லாம் படித்து
டாக்டர் இஞ்சினீயர்
வக்கில் நீதிபதி
கலெக்டர் என்று ஆனால் போதாதா?
சரி.
மந்திரம் திருப்பிச்சொல்லு.
தர்ப்பைப்புல்லை
கொஞ்சநேரத்துக்கு பிடிச்சுக்கோ..
சுக்கிலம்பரதரம்...ம்ம்
தலயிலே குட்டிக்கோ...
இது தானே பார்க்கிறாய்..
தமிழா
வீட்டுக்கு வீடு வாசற்படியாய்
இந்த பசு மூத்திர வாடையில் தானே
எல்லாம் முங்கிக்கிடக்குது.
இந்த அடிமைத்தன கஞ்சாப்போதை தானே
ஓ தமிழா! தமிழா!!
இன்னும் உன் வாழ்க்கைப்பயணத்தின்
எல்லா மைல் கல்லிலும்
பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது.
இது
மாறும் வரை
தமிழின் நெருப்பு மணம்
எல்லா மூலை முடுக்கிலும்
பரவும் வரை...
தமிழா! தமிழா!! தமிழா!!!
............
அழைப்புக்குரல்
எதிரொலித்துக்கொண்டே தான் இருக்கும்.
________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக