இறவு மறுப்பவன்.
____________________________________
இரவுகள் தோறும்
அந்த அண்டங்கருப்பு
வானத்தின்
குடலை உருவித்
துருவித்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
என் ஆவி
நாளை வந்து அங்கே
உட்கார
எங்கே இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது
என்று
தேடித் தேடி...
கருட புராணம்
கிளாஸ் கிளாஸாக
ஊற்றித்தரும்
"பயப்பிராந்தியை"
குடித்துக் குடித்து
ஸ்லோகங்களின் தலையணக்குள்
தலை
புதையுண்டு கிடக்கிறேன்.
கனவுகளில்
கணங்கள் தோறும்
"ஜனனம் மதுரம்
மரணம் மதுரம்" தான்.
"ஒன்றுமே இல்லை"க்குள்
ஒன்றுமே இல்லை தான்.
வாழ்க்கை எனும்
அனஸ்தீஷியா
ஏற்கனவே
ஒரு மரத்துப்போன
கூடாரத்துள் தான்
தள்ளியிருந்தது.
இதில் "ப்ரம்ம விச்சாரம்"
எனும்
பாஷ்யங்களை வைத்துக்கொண்டு
என்ன செய்ய?
மனிதம்
என்பது
அழகான
மகிழ்ச்சி நுரைத்த
பூங்குமிழி தான்.
ஆனாலும் அது நுரையல்ல.
அறிவின் அந்தரங்க
அரத்தங்களின் அர்த்தங்கள் தேடும்
ஆழ் கடல்!
செவ்வாய்க்கோளில்
இப்படி குமிழி வீடுகள்
தயார் என்று
எலான் மஸ்க்
புக் பண்ண அறைகூவல்
விடுத்திருக்கிறார்.
இருப்பினும்
லேப் டாப் ப்ரௌசிங்கில்
ஒவ்வொரு
நானோ செகண்டும்
ஜன்மம் எடுத்து
விளையாடிக்கொண்டிருப்பதே
நான்
அந்தக் கடவுளோடு
கிச்சு கிச்சு மூட்டி
விளையாடுவது தான்.
ஒரு யூ ட்யூபில்
அந்த ப்ரொஃபெஸ்ஸர்
கிரிஸ்டல் பேசிஸ்
லேட்டைஸ் மாடுலஸ் கணிதம்
பற்றி
ஃபீல்டு மெடல் லெக்சர்
கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
அந்த சமன்பாட்டு ரங்கோலிகளின்
நுண்ணழகில்
மயங்கிக்கொண்டே
ஆழ்ந்து கொண்டிருக்கிறேன்.
________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக