புதன், 28 மே, 2025

ஒரு பின்னூட்டம்

 

கவிஞர் மகுடேஸ்வரன் கட்டுரைக்கு ஒரு பின்னூட்டம் ("மின் தமிழ்"குழும மின்மடல்)

__________________________________________________________________________________

28.05.2025



ref: https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/pfbid037W1s1v2n4mUAq2pfW7CDmGPNUiZPEmBNxmSU7wuXCyTvwnCbkuzjbs2PCbSeGiK8l



அருமையான கட்டுரை.கவிஞர் மகுடேஸ்வரனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.அதில் சொல்லின் ஒலிப்பும் அதன் சேர்க்கையும் அருமையாக விளக்கப்பட்டிருக்கின்றன.

அதில் தெலுங்கில் குறிப்பிட்ட பண்டு என்ற சொல்லும் தமிழ்ச்சொல் தான்.பண்டைய என்று நாம் சொல்லும்

"பழம் அதாவது "பழந்தமிழ்" போல என்பதையும் அது குறிக்கிறது.எங்கள் நெல்லை மாவட்டத்தில் 

"பண்டுதன்" என்று குறிப்பிடப்படுபவர்கள் தான் ஊரின் ரெடி ரெஃபரன்ஸ் போல தரவுகள் சொல்பவர்கள்.இவர்கள் "இறப்பு நிகழ்வுகளுக்கு" என்ன செய்யவேண்டும் என்று வழிகாட்டுபவர்கள்.இவர்கள் தான் நம் பண்டைய தமிழ்க்குடிகள் என்பதில் ஐயம் ஏதுமில்லை.இடுகாட்டு இயல் என்னும் நடைமுறைகளை

எடுத்து சொல்பவர்கள். இவர்கள் தான் அங்கு "குடிமகன்"கள் என அழைக்கப்படுகிறார்கள்.அவர்கள் அதற்கு

பெறும் சம்பளங்கள் அவர்கள் உரிமை எனும் பொருள்பட "சுதந்தரம்" எனச்சொல்லப்படுகிறது.மேலும் இவர்கள் தான் நம் பூர்வ அதாவது பழம்பெரும் "மருத்துவர்கள்" ஆகும்.நாவிதர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுவதற்கு 

காரணம் "நாலாவித"வேலைகளும் தெரிந்தவர்கள் என்பதால் தான். நாவிதம் என்பது நாவல்லமையையும் குறிக்கும்.

வீடுகளில் மக்களுக்கு நோயினால் புண் ஏற்பட்டு சீழ் வைத்தால் அதற்கான "அறுவை" மருத்துவமும் அறிந்தவர்கள்.உண்மையில் மருத்துவப்படிப்புக்கான முதல் தகுதி இவர்களுக்கே உண்டு.இந்த அரிய பழைய  தமிழ்ச்சுவடிகள் வைத்து

இவர்கள் கல்விப்பணியையும் ஆற்றியிருக்கிறார்கள்.எனவே முதல் பண்டுதர்களான இவர்களே பண்டிதர்கள்

பண்டிட்கள் ஆனார்கள்.பாருங்கள் நாகரிகத்தின் உச்சியில் இருந்து தள்ளிவிடப்பட்ட இவர்களது அவல நிலைகளை.இவர்கள் வீடுகளில் தான் பழைய ஓலைச்சுவடிகள் காக்கப்பட்டு இருந்தன.பெரும்பான்மையான‌

தமிழ்ப்புலவர்கள் இவர்களிடமிருந்தே உருவாயினர் என்பதும் உண்மை.சித்தர்கள் வள்ளுவர்கள் கம்பர்கள் 

(இசைக்கருவி இயக்குபவர்கள்) எல்லாம் இவர்களே.சீவக சிந்தாமணி இயற்றிய "சீழ்த்தலை"சாத்தனார் கூட‌

ஒரு பண்டிதராய் இருக்கக்கூடும்.இவர்கள் புத்தம் சமணம் போன்ற மதங்களில் இணைந்திருக்கலாம்.அவர்கள்

தான் நுண்கலை வளர்ப்பார்களாக (குகை சிற்பங்கள் ஓவியங்கள்) இருந்திருக்கின்றனர். "பண்டு" எனும்

பழம் எனும் பழைமை குறிக்கும் நம் தமிழ்ச்சொல் மிகவும் ஆழ்ந்த பொருள் உடையது."பண்டிட்" என்ற உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கத்தக்கவர்கள் இவர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இப்படிக்கு

ருத்ரா இ பரமசிவன்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக