ஞாயிறு, 18 மே, 2025

"18-5-25 காலை 7-30 தெரியாதவரல்ல அவர்!"


_________________________________________________________________-

உள்ளூர்த் தேர்த்திருவிழா
ஐந்து நாள் கொண்டாட்டம்!
சாதிவாரியாக் கட்டளைகள்.
இன்ன சாதிக் காரங்க
இன்ன காரியத்தை ஏத்துக்கிட்டுச்
செய்வாங்க
அப்படீங்கிறதுதான் கட்டளை.
உட்சாதிகள் உட்பட
ஒன்னு விடாம அழைப்பிதழில்
அத்தனையும் போட்டாச்சு
சில பெயர்கள் இரண்டு மூன்று
சாதிகளில் இருந்தன
குடும்பத்திலே சாதிமறுப்புத்
திருமணங்களை வரவேத்தவங்களுக்கு
மரியாதையாம்..
சொந்தச் சாதி வந்த சாதி
எந்தச் சாதியானாலும் விடக்கூடாதாம்.
சாதியெல்லாம்
சமம் என்பதை நிலைநாட்டனுமே!
கொண்டாட்டம்னா
அறிவாளிங்கள்லே காய்தத்தை ப் பார்த்து
ஒருத்தர் படிக்க
அவருக்கப்புறம் படிக்கவேண்டிய
மூனே மூனுபேர் உட்கார்ந்துகேட்பாங்களே
அப்படியா?
எட்டுச் சுத்துப் பட்டியும்
திமுதிமுன்னு வந்துகூடப்
பரம்பரைக
ஒரம்பறைகன்னு கூட்டம்
தாங்க முடியாது.
இப்பவெல்லாம்
யாரும் பீடி சிகரட்டு ப்
பிடிக்கிறது கிடையாது
தெய்வக் குத்தம்னு தெரிஞ்சு
சாராயம் கள்ளுன்னு
மாத்தித் திருந்திட்டாங்க.
கூத்து குத்தாட்டம் பார்க்கிறதுக்கும்
தமாசுப் பட்டிமன்றம் கேட்கிறதுக்கும்
ரொம்ப ஒத்தாசை சாராயம்தானாம்.
ஆனாக்கா
தப்புத் தண்டா தெரிஞ்சு
ஆண்டவன் கோபத்துக்கு
ஆளாயிடக் கூடாதேன்னு
இந்த
அஞ்சு நாளும் யாரும் அஞ்சுவதில்லை
ஏனென்றால்
இந்த அஞ்சு நாளும்
கடவுளே ஊருக்குள் இருப்பதில்லை
சிலையை த்
தைரியமா விட்டுட்டுக்
கொஞ்சம்கூடத் தயங்காமல் அவர்
கோயிலைவிட்டு
வெளியே போய்விடுவாராம்
அப்படிப் போன கடவுள்க சிலபேர்
திரும்பிவந்து பார்த்துத் தங்கள்
சிலையைக் காணாமல்
தேம்புன கதையும்
தெரியாதவரல்ல அவர்.
கடவுளா இருக்கிறதும்
அத்தனை சுலபமில்லை
இருந்து பார்த்தாத்தான் தெரியும்!
18-5-25 காலை 7-30
தெரியாதவரல்ல அவர்!

__________________________________________ERODE THAMIZHANBAN.

கடவுளா..
அட!ந‌ம்மாளு இவரு!
ஆனா
எப்படி கர் புர்ருனு
மந்திரத்துக்குள்ள‌
உக்காந்து கிட்டு
மொட்ட மணியம்லாம் 
பண்ராருன்னு புரியல.
விடுங்க.
புரியாமலேயே இருந்தாத்தானே
இங்க எல்லாத்துக்கும் நல்லது.
அடி பட்டு நசுங்குறவனுக்குக்கூட‌
தினம் தினம்
மண்டகப்படி தான்.
கட்டள தான்.
எங்க...
இந்த சனத‌னத்தை கொஞ்சம்
தொட்டு தான் பாருங்களேன்.
சாதித்தீயின் புத்தீசல்கள் தான் இதுக.
நம்ம குல சாமிக!
எங்கட்ட கேட்டா
நாங்களா காரணம்?
பொம்மலாட்டத்து 
நூலப் புடிச்சுகிட்டு இருக்கிரவஞ் சொல்ரான்.
டாஸ் மாக்கு சோம பானத்தைச்சொல்லும்.
சோம பானம் சுரா பானத்த சொல்லும்.
இதெல்லாம் போட்டாத்தான்
வானத்திலேருந்து
வேதங்க குதிச்சு வரும்னு..
சொல்லிட்டே இருக்காங்க..
அதெல்லாம் எதுக்குங்க?
"நாமிருக்கும் நாடு
நமதென்பதறிவோம்..."
ஆனா..
நாம இப்ப 
எங்கே இருக்கிறோம்ணு தான்
நாம இன்னும் அறியல..
எத்தன நூத்தாண்டு?
எத்தன நூத்தாண்டு?
அதுக்கென்ன இப்போ..
அந்த குட்ட இருக்கிரவரைக்கும்
சாமிக இருக்கிர‌ வரைக்கும்
சாதிக இருக்கிர வரைக்கும்
இப்டி
ஊறிட்டு தான் கெடப்பொம்.


_________________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக