குரு பீடம்
___________________________________
அல்பம்..
இந்த காபியையே விட முடியல..
இளம் வயசிலே இப்படி
சன்யாசம் வாங்குறதுன்னா..
வயத்துல என்னமோ
மொட மொடங்குதுங்கற
பாணியில யாரோ முகநூல்ல
பதிவு இட்டிருந்தார்கள்.
.. . . . . . . . . . . . . . . . . . . . . . .
நம்மால அந்த "காபியையே"
விட முடியல.
அந்த சனாதனம் சொல்லும்
சாதிவெறியையா விடமுடியும்?
அது சரிங்க.
பிரம்மம்னா
"சஹஸ்ர சீர்ஷம் சஹஸ்ராக்ஷம்"
என்றாளே!
எல்லா உயிர்களும்
ஆயிரம் கழுத்துமாய்
ஆயிரம் கண்ணுமாய்
நிரவியிருக்கின்றன.
அவை மீது பிரம்மம்
தெரிகிறது என்றாளே.
அப்புறம் இந்த
கீழ் சாதி தீட்டு
ஜலம் தெளிப்பு
இவா படிக்கவே கூடாது
நம்ப்ள மாதிரி
தவம் கூட செய்யக்கூடாது.
அதற்கு தண்டனை
தலையை அறுப்பது தான்..
இது எல்லாம்
எதற்கு எப்படி ஏன்?
இவரும் நாளை
உபதேசம் சொல்வார்
சுகினோ பவந்து...
சாந்திஹி..சாந்திஹி..
என்று.
இந்த குரு பீடம் தானே
சாதி பேதம் மகா பாவம்..
மனிதம்.. மனித நேயம் தான்
பிரம்ம வடிவம் என்று
நிறுவ வேண்டும்.
இதை விட்டு
வர்ண பேதமே பிரம்மம்
என்று
"மவுன வ்ரதம் மற்றும்
அனுஷ்டானங்கள் அனுசரித்துக்கொண்டு"
இருந்தால்
அந்த பிரம்மம் தானே
சித்ரவதைகள் அனுபவிக்கும்.
கும்பிடுபவர்களுக்கும்
இது இன்னும்
விளங்கவில்லை.
கும்பிடு பெறுபவர்களுக்கும்
இது பற்றி கவலையில்லை.
______________________________________________
ப்ரஹ்ம ராட்சசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக