வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

நின்று விட்ட ஊஞ்சல்கள்!..

நின்று விட்ட ஊஞ்சல்கள்!..

--------------------------------------------------------------


 

நின்று விட்ட ஊஞ்சல்கள்!..

ஃப்ரீஸ் பண்ணியது யார்?

உன் கற்பனை

கால் பதிக்காமல் 

முறிந்து விழக் காரணம் என்ன?

தமிழா அது?

அமிழ்தம் அல்லவா அது!

என்ற சொல் 

எங்கே தொலைந்து போனது?

பாலிவுட் காடுகளில்

படர்ந்து செழிக்கும் 

முள்ளிலைக்கூட்டங்களா

உன் முல்லைத்தமிழை

அள்ளி வீச வருவது?

அதிரடி ஓட்டுகளின்

அலப்பறைகளா

நம் தமிழுக்கு மூடு விழா

நடத்த‌

நம் நரம்புகளையே வைத்து

தோரணங்கள் 

தொங்கல் விட வருவது?

நம் எரிமலைப்பொங்கல்

கொழுந்து விட‌

எப்போதும் மறப்பதில்லை.

புழுக்களா நாங்கள்?

உழுவை உறுமல்கள் அல்லவா

எங்கள் உள் மூச்சுகள்!

எட்டுத்தொகைகளிலும் ஒரு

எட்டாத சிகரம் உண்டு!

கடல் மூழ்கி எம்மை

அமிழ்த்திய போதும்

வெள்ளம் வடியட்டும் என

"கல் தோன்றி மண் தோன்றும்

முன்னே

வாளுடன்

முன் தோன்றும் மூச்சுத்தமிழின்

வீச்சு சொல் இது!

"தமிழ்ப்பகைமையை

முற்றாய் ஒழிக்கும்

எங்கள் தமிழ்!


_____________________________________________20.02.25

சொற்கீரன்

அதற்கு யார் பொறுப்பு?-என்று
19-02-2025 ல் எழுதிய
ஈரோடு தமிழன்பன் அவர்களின்
கவிதை பற்றிய கவிதை.


____________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக