அக்கினி ஆற்றின் ஊற்றில்...
_______________________________________-
ஒரு ராட்சசப்பறவையின் எச்சம் போல் தான் நம் மீது இந்த மரணம் வந்து விழுகிறது. வானமே வானம் கொள்ளாத சிறகுகளையும் கூர் நகங்களையும் கொண்டு நிழல் காட்டுகிறது. சூரியன் கூட அந்த மேகக் கைக்குடைகளினால் கண்ணீர் துடைத்து துடைத்து நகர்கிறான். கண்ணீர் ஏழு வர்ண நிறப்பிரிகையில் ஏழாயிரம் சோகங்களாய் பிழியும்போது கூட அடி உள்ளத்தின் கேவல்களே உங்கள் அகவல் பாக்கள். ஆனால் அதனுள்ளும் உங்கள் எரிமலை ஈரமாயில்லை. அந்த ஈன மகன் அன்னைத்தமிழ் முகத்தில் ஆசிட் வீசிட பெரியாரை முகவரியை சிதைக்கத்துணிந்தான். ஈரோடு ஈரோட்டிலா இருக்கிறது. தமிழ் நெஞ்சங்களின் இழைகளின் "நெசவுகளில்" அல்லவா இருக்கிறது! உங்கள் கவிதையில் ஒரு அழுகை அக்கினி ஆற்றின் ஊற்றில் இருந்து தானே பெருகிக்கொண்டு ஓடுகிறது! ___________________________________________________ சொற்கீரன்.
13-02-2025 ல்
"காதோரம் வந்த காற்று"
என்ற தலைப்பில் எழுதிய
ஈரோடு தமிழன்பன் அவர்களின்
கவிதை பற்றிய கவிதை இது.
__________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக