செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

அந்த பனைமரம்

 


அதோ

அந்த பனைமரம் 

மிக நெட்டையாக இருக்கிறது.

அதன் ஓலைச்சிலுப்புகள்

காற்றோடு அளைந்து அளைந்து

ஏதோ பேசிக்கொண்டிருக்கிறது.

எனக்கும் ஆசை தான்

அதனோடு அரட்டை அடிக்க.

அது கேட்கிறதோ இல்லையோ

நான் என் அரட்டையை 

ஆரம்பித்தேன்.

ஏம்பா  இப்படி

நெட்டையா வளந்திருக்கையே

ஒனக்கு அறிவே இருக்காதா?

பின்னே என்ன?

எல்லாத்தையும் பாத்துக்கிட்டுத்தானே இருக்கே.\

என்ன சொல்றீக?

நீ வெறும் பனைமரம் இல்லை.

ஈழம் என்றும் உனக்கு ஒரு பெயர் உண்டு.

உன் நிழல் வாழ்ந்த‌

இப்பெரும் தமிழ் இனம்

உலகம் முழுதும் தன் காலடிச்சுவடுகளை

விதைத்து சென்றிருக்கிறது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக