திங்கள், 21 ஆகஸ்ட், 2023

மூட்டை



கவலைகளின் மூட்டைகளாய்

பிரசவித்தோம்.

அது என்ன கவலை?

எதற்கு கவலை?

என்று மூட்டையை 

பிரித்துப்பார்க்கவும் கூட ப்யம்.

கவலையை விடுங்கள்.

மோட்சம் உங்கள் மடியில் விழுப்போகிறது.

இதோ சம்ப்ரோக்ஷண‌ம்

என்று ஜபித்துவிட்டு சென்றார்கள்.

இப்போது கவலையைப்பற்றி 

கவலைப்படும் கவலையெல்லாம் இல்லை.

அது சரி.

அது என்ன மோட்சம்...சம்ப்ரோக்ஷண‌ம்?

அது தான் என்ன என்று  நானும் கேட்கிறேன்.

மேலிருந்து அது கடவுளின் குரல்.

மூட்டை இன்னும் பிரிக்கப்படவில்லை.


______________________________________________________

ருத்ரா







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக