ஞாயிறு, 18 நவம்பர், 2018

வேதாரண்யம்

வேதாரண்யம்
______________________________ருத்ரா

வேதனை ரணங்கள் தான்
இதன் பெயர்
என்று வீடியொக்கள்
காட்டுகின்றன்.

தென்னைகள் தங்களுக்கே
ஆயிரம் ஆயிரமாய்
தென்னோலைகளில்
பாடை கட்டிக்கொண்டன.

இருட்டிலேயே இருந்து
இருட்டையே சமைத்து
சாப்பிடும் கோரம்.
சரித்திரம் எழுத
கண்ணீரே மிச்சம்.

குவிந்த வாக்குகள் என்னாச்சு?
கணினிப்பொறி என்பது
எலிப்பொறி இன்று
இப்போது தான் தெரிந்தது.

_____________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக