திங்கள், 26 நவம்பர், 2018

பளிங்கத்து அன்ன பல்காய் நெல்லி

"பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் 
தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது" பற்றிய 
சங்கப்பாடல் ஒன்றில் கீழே வரும் வரிகள் மிக மிக 
அழகானவை..காட்சிகளும்  நுட்பம் செறிந்தவை
"பாலை பாடிய பெருங்கடுங்கோ" எனும் அப்புலவன் 
எழுதிய பாடல்கள் எல்லாம் நம் தமிழ் மொழியின் 
இலக்கிய ஆற்றலையும் நுண்மை வாய்ந்த அதன் 
சொற்பிறப்பு மற்றும் அதன் சொல் ஆளுமையையும்  
உலக அறிஞர்கள் பெரிதும் போற்றுகிறார்கள். அந்த 
"அகநானூறு பாடல் (5) ன்  சில வரிகளை கீழே பாருங்கள்.





.............................................................
...........................................................
முளிந்த ஓமை முதையல்அம் காட்டு, 
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி, 
மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப
உதிர்வன படூஉம்...............

"பட்டுப்போன ஓமை மரங்கள் நிறைந்த 
அந்த பெரும்பழமை வாய்ந்த காடுகளில்
பளிங்கு போன்ற அந்த  கொத்து கொத்தான 
நெல்லிக்காய்கள்வெகு அழகானவை.
பெரிய முரட்டுப்பாறையில் அவை உதிர்ந்து 
கிடப்பது "சிறுவர்கள் விளையாடும் "வட்டுகளை 
(அதாவது கோலி குண்டுகளை)ப்  போல இருந்து 
ஏமாற்றுகிறது".......

என்ன அசத்தலான கற்பனை?
"பாலை பாடிய பெருங்கடுங்கோவின்"
"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி"
எனும் வரிகளின் அழகில் மூழ்கித் 
திக்கு முக்காடிப்போனேன்.

அந்த பொறியில் கிளர்ந்த கற்பனையில்  நான் 
இந்தப்பாடலை சங்க நடைசெய்யுட் கவிதையாய் 
ஆக்கியுள்ளேன்.



பளிங்கத்து அன்ன பல்காய் நெல்லி 
====================================ருத்ரா இ பரமசிவன். 


வேங்கை அங்குறி அடை சேர்ந்தாங்கு 
அவன் மணிகிளர் அகலம் தழையக்கூடி 
அலை விழி புதைக்கும் மீட்கும் ஆங்கே 
நுண்டுழி திண்டிய இலஞ்சியின் பனிநீர் 
கானிடை நீழல் பளிங்கத்து அன்ன 
பல் காய் நெல்லி கண்டிசின் திரள் தரு 
கனவின் வாழ்க்கை துய்க்கும் துடிக்கும் 
மீட்டும் மீட்டும் தழீஇய செய்யும் 
மட மாண் ஆயிழை ஒண்ணுதல் வேர்க்கும்.
பஃ ருளி பாய்தரு அடுக்கத்து அருவி 
சில்லொலி சிலம்ப செயிர்த்துழி புலம்பும்.
ஒங்கலிடையும் ஓவா திரையில் 
அணிசெய் நீலம் கடல் கண்டாங்கு 
எக்கர் ஞாழல் பொழில் சூழ் குன்றன்
எற்றுக்கிவள் மையுண் மழைக்கண் 
அலமரல் செய்யும்  கவின் மீக்கழிய ?
 இஃது  உன்னுவன் துன்னுவன் ஆகி 
ஆர்கலி இன்பம் அவிர்படுதல் யாஞ்ஞன் ? என 
அவள் வாயுரை நோக்கி குழைந்தனன் ஆங்கே .
முகமதில் பல் கண் பூத்தது அன்ன 
கடலின் ஓரக்  குப்பைக்கண்ணே 
அலவன் யாக்கும் அடைகுழி மூசும் 
சில்புள் சிலவாக வந்தன சென்றன.
அன்னவாக  அவள் நெஞ்சும் அதிரும்.
பூவும் வருட அஞ்சும் அவள் அகம் .
பூஞ்சிறைத்தும்பி புகுதரல் செய்மோ என 
கையுட்சேக்கை அனிச்சங்கள் போன்ம் 
ஆர்த்தவன் தழுவினன் அணைவாய் ஒற்றி. 

============================================





என்ன அசத்தலான கற்பனை?
"பாலை பாடிய பெருங்கடுங்கோவின்"
"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி"
எனும் வரிகளின் அழகில் மூழ்கித் 
திக்கு முக்காடிப்போனேன்.

அந்த பொறியில் கிளர்ந்த கற்பனையில்  நான் 

இந்தப்பாடலை சங்க நடைசெய்யுட் கவிதையாய் 
ஆக்கியுள்ளேன்.

கவிதையின் உட்பொருள் 

-----------------------------------------
தலைவனும் தலைவியும் கூடும் அந்த இன்பப்பொழுதில் 
திடீரென்று அவன் சென்ற கொடும் கானத்தில் 
அவன் கண்ட அந்த நெல்லிக்காய்கள் கொத்து கொத்தாய் 
பளிங்கு குண்டுகளாய் அழகாகவும் தெரிகின்றன .
அதே சமயம் இந்த வாழ்க்கையின் இன்பம் நிலையில்லாமல் 
அந்த பளிங்கு குண்டுகளைப்போலஉருண்டு சென்றுவிடுமோ 
என்று பதை பதைப்பு அடைகிறாள். தலைவன் அன்புடன் அவளை 
ஆறுதல் செய்து அணைத்துக்கொள்கிறான்.

விரிவான பொழிப்புரை தொடரும்.



===============================================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக