வியாழன், 14 மே, 2026

நாற்காலிகள்

 



பூவா? தலையா?

போட்டுப்பார்த்தார்கள்.

பூவும் தலையும் 

இல்லாதவர்கள்.

பூ விழுந்ததா?

தலை விழுந்ததா?

பேரங்கள் கூச்சல் இட்டன.

நாற்காலிகள்

பரிமாறிக்கொள்ளப்பட்டன.

கணக்குகளுக்குள் 

ஒரு கணக்கு இருந்தது.

மாமூல் விடியல்களில்

வானம் கீறிக்கொண்டது.

_______________________________‍

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக