செவ்வாய், 15 அக்டோபர், 2024

அகழ்நானூறு 81

 

அகழ்நானூறு 81

____________________________

சொற்கீரன்



வணர் ஒலி ஐம்பாலாய் 

வரை அடுக்கத்து

ஒள்ளருவி வரி கூந்தல் 

விரித்தது காண்.

வெள்ளாறு வியன் அகல‌

கொடுமுடியும் மறித்தாங்கு

பொருள் கொள்ள ஆரிடை

நனிஊர்ந்த மல்லன்

நடை திறக்கும் நாளே

நன்னாளாமென சுருள் அரவு

பரி அற்று கிடந்ததன்ன‌

அவன் வரவு நோக்கி

அவண் நோற்றாள் என்

என முன்றில் வீக்கள்

அலமரல் ஆற்றும் மன்னே.

________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக