புதன், 9 அக்டோபர், 2024

தேர்தல் எங்கே நடந்தால் என்ன?


 

தேர்தல் எங்கே நடந்தால் என்ன?
தேர்தல் தேர்தல் தான்.
மக்கள் மக்கள் தான்.
ஆலிவர் கோல்ட்ஸ்மித்
எழுதினான்.
அது ஒரு கட்டுரையாக‌
எஸ் எஸ் எல் சி
ஆங்கிலப் பாடப்புத்தகத்தில்
இருந்தது
"அன் எலக்ஷன் இஸ் டிஸ்க்ரைப்டு" என்று.
எங்கும்
எப்போதும்
அதன் குறுக்குவெட்டுத்தோற்றம்
ஒன்றே தான்.
ஏதாவது கொடுக்க வேண்டும்.
அந்த கட்சி ஜெயித்து விடலாம்.
ஆனால்
மக்கள் எப்போதும்
தோற்றுக்கொண்டே இருப்பார்கள்.
அது அவர்களுக்கு
ஒரு பொருட்டே இல்லை.
நமக்கு கடவுள் இருக்கிறார்.
கோவில் இருக்கிறது
விழா இருக்கிறது
மதம் இருக்கிறது.
பசிக்கு சோறு கிடைத்தவுடன்
அப்புறமும்
இப்படித்தான்
பசி வறுமை பிணி
என்ற சக்கரத்தைச்
சுற்றிக்கொண்டே
இருக்க வேண்டும்
பகவான் சக்கரமும்
இந்த கேள்வியை மட்டுமே
சுற்றிக்கொண்டிருக்கும்.
தீர்வு எனும்
சிந்தனை பற்றி
சிந்திக்கவே முடியாது.
இடைத்தேர்தல் நமக்கு
விடை தெரியா
இடைவெளியா?
தலைகள் "எண்ண"வேண்டும்.
தலைகளை எண்ணவா ஜனநாயகம்?
பாதி வரை
மயிலிறகு தான்.
பாதிக்கு மேல் ஒன்று
வந்தாலே போதும்.
பட்டாக்கத்தி ஆகி விடும்.
சாதாரண மக்கள்
சதா ரணமாகும்
அவலங்களில் தான்.
சொற்போருக்கு பஞசமில்லை.
சோற்றுக்குத் தான் பஞ்சம்.
"தேர்தல் எங்கே நடந்தால் என்ன?
தேர்தல் தேர்தல் தான். மக்கள் மக்கள் தான். ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதினான். அது ஒரு கட்டுரையாக‌ எஸ் எஸ் எல் சி ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இருந்தது "அன் எலக்ஷன் இஸ் டிஸ்க்ரைப்டு" என்று. எங்கும் எப்போதும் அதன் குறுக்குவெட்டுத்தோற்றம் ஒன்றே தான். ஏதாவது கொடுக்க வேண்டும். அந்த கட்சி ஜெயித்து விடலாம். ஆனால் மக்கள் எப்போதும் தோற்றுக்கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. நமக்கு கடவுள் இருக்கிறார். கோவில் இருக்கிறது விழா இருக்கிறது மதம் இருக்கிறது. பசிக்கு சோறு கிடைத்தவுடன் அப்புறமும் இப்படித்தான் பசி வறுமை பிணி என்ற சக்கரத்தைச் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் பகவான் சக்கரமும் இந்த கேள்வியை மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கும். தீர்வு எனும் சிந்தனை பற்றி சிந்திக்கவே முடியாது. இடைத்தேர்தல் நமக்கு விடை தெரியா இடைவெளியா? தலைகள் "எண்ண"வேண்டும். தலைகளை எண்ணவா ஜனநாயகம்? பாதி வரை மயிலிறகு தான். பாதிக்கு மேல் ஒன்று வந்தாலே போதும். பட்டாக்கத்தி ஆகி விடும். சாதாரண மக்கள் சதா ரணமாகும் அவலங்களில் தான். சொற்போருக்கு பஞசமில்லை. சோற்றுக்குத் தான் பஞ்சம். "எல்லாருக்கும் எல்லாமும்" எப்போது கிடைக்கும்? ஏ ஐ களைக்கொண்டு குவித்தாலும் "பங்கு"சந்தையே இங்கு சங்கு சக்கரம். தரித்திரத்தின் சரித்திரத்தில் பொற்காலம் என்பது கண்ணீர் மழையில் தான். குருதிகள் கொட்டி எழுதிய‌ குருட்சேத்திரம் என்றாலும் சூழ்ச்சியே சூழ்ந்து நிற்கும். ____________________________________________________ சொற்கீரன்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக