வியாழன், 17 அக்டோபர், 2024

"சோசியல் எஞ்சினீயரிங்"

 


"சோசியல் எஞ்சினீயரிங்"

______________________________


அந்த வெள்ளைக்காரர்கள்

கையாண்ட பிரித்தாளும் 

தந்திரத்தை வைத்து தான்

நம்மூர் வெள்ளைக்காரர்கள்

சனாதனம் என்ற பெயரில்

கருப்பு மற்றும் வெள்ளை நிறமற்ற 

நிற‌த்தவர்கள் மீது

ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

அதற்கு தான் காரணமில்லை

என்றும்

மேலே இருக்கிற கடவுள் ஏற்படுத்திய‌

ஏற்பாடு தான் இது

என்றும்

புராணங்கள் இதிகாசங்கள்

மற்றும் வேதாந்த பாஷ்யங்கள்

மூலம் 

ஊதி பெருக்கிய மந்திரம் 

மற்றும் சடங்ககுகள் எனும்

பொய் மூட்டைகளின் கனம் தாங்காமல்

இந்த தேசத்து

அறிவின் அச்சே முறிந்து போனது.

நம்மை ஆண்ட‌

அதே வெள்ளையர்களின் கல்வி முறை

இந்திய தேசத்துக்கு

ஒரு வெளிச்சம் காட்டியது.

சாதி வர்ணங்களின் இருட்டு தேசமாக‌

இருந்த நம் நாடு

கொஞ்சம் வானம் வெளுக்கத்

தொடங்கியதை அறிந்தது.

சுதந்திரம் எனும் குரல் உயர்ந்தது

உண்மைதான்.

ஆனால் ஆதிக்கம் செலுத்தும் மதம்

தன் வேதாந்த வர்ண தேசத்தை

நிறுவ வரிந்து கட்டியது.

மக்களின் விழிப்புணர்வு அதற்கு

குறுக்கே நின்றது.

அதன் விளைவாக 

ஒரு மூவர்ணக்கொடி நிழலில்

அந்த நான்கு வர்ணக்களைகளையும் எதிர்த்து

போராடும் நிலையில் தான் 

நாம் இன்னும் இருக்கிறோம்.

சாதிகள் நமக்கு அக்மார்க் முத்திரை

என்ற பொய்மைப்போதையைத்

தான் 

இந்த கோவில் விழாக்களும்

குடமுழுக்குகளும்

உருமாக்கட்டல்களும்

ஆண்ட பரம்பரை எனும்

ஆதிக்க வெறியாட்டங்களும்

ஊத்தி ஊத்திக்கொடுக்கிறது.

இதை 

யார் யாருக்கு 

எப்படி ஊத்திகொடுத்து

மனிதம் எனும் ஒரே ஆற்றலை

சுக்கு நூறாக்கும் சூழ்ச்சிகள் செய்யும்

சூட்சுமமே இந்த "இஞ்சினீயரிங்".

நம் இளைய சமுதாயம் இந்த

சூழ்ச்சிக்கு இரையாமல்

மதசார்பற்ற சாதிய வன்மம் அற்ற‌

ஒரு மக்கள் சமுதாயத்தை

படைக்க அணிதிரளவேண்டும்.

பொறியியல் கல்லூரிகளில் இருந்து

புறப்படும் இளம்புயல்களே!

தந்திர‌வாதிகள் இப்படி

பொறிவைத்து நம்

ஜனநாயகத்தை விழுங்கும்

அபாயங்களை புரிந்து கொள்ளுங்கள்.

மானுடம் வென்றதம்மா

என்று ஒரு கவிஞன் பாடினான்.

ஆம் 

இந்த சமுதாய சமநீதியின்

மானிடமே நம் மகத்தான பேராற்றல்.

வாழ்க ஜனநாயகம்!

வெல்க ஜன நாயகம்!


_______________________________________________

சொற்கீரன்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக