திங்கள், 14 அக்டோபர், 2024

பொற்கிழி பெறும் கவி இமயம் ஈரோடு தமிழன்பன்

 


பொற்கிழி பெறும் கவி இமயம் ஈரோடு தமிழன்பன்

அவர்களுக்கு

ஒரு பாராட்டு மடல்

_______________________________________


அந்த இமய வரம்பன் போல்

என் மீது ஏறி

நீயும் தமிழ்க்கொடி 

பொறிக்க வந்திட வேண்டாம் 

கவிஞனே.

இதோ நானே

உன் தமிழ் ஒளி பெற்றிட‌

இறங்கி வருகின்றேன்

கவி இமயமே!

உன் உயர்ச்சியால்

இந்த கூழாங்கற்களும் 

வைரம் ஆகின.

தினம் ஒரு கவிதை.

பூங்காலை இமை திறக்கு முன்னே

உன் பேனா மூடி திறக்கிறது.

அப்புறம் என்ன?

சொற்களின் வெள்ளம் தான்.

தமிழுக்கு நீ தந்த அரியணை

மில்லியன் மில்லியன் 

ஒளியாண்டுகளின் "உயரத்தில்".

சூரியன் கிழக்கில் நிற்கும்போது

நீ மேற்கில் நிற்கிறாய்

அவனோடு

தமிழ்ப்பூப்பந்து விளையாடும்

ஒரு ஒளி படைத்த கண்ணினாக!

உன் புத்தகங்கள்

ஏணிகள் ஆயின‌

இந்த தமிழ்ச்சிகரங்களுக்கு எல்லாம்.

குதிரைகள் நுரைதள்ளி

கொஞ்சம் அயரலாம்.

உன் எழுத்துக்கள்

அந்த ஜேம்ஸ் வெப் 

தொலைநோக்கியோடேயே

சென்று

அண்டம் அளந்து நம்

தமிழுக்கு அளபடை சொல்கிறது.

அதன் இன்னிசை அளபடை கேட்டு

நாங்கள் பூரித்துப்போகிறோம்.

பொற்கிழி பெறும் தமிழின்

பொற்குவையே!

உன்னை அளந்து குவிக்க‌

அளவைகள் போதாது.

அதனால்

அந்த அகன்ற வானத்தை

இன்று ஒரு நாள் வாடகைக்கு

எடுத்திருக்கிறோம்.

அது கேட்ட விலை

உன் கவிதை மட்டுமே!

நீ நீ நீ நீ ...

ஆம் நாங்களும் தான்

உன் தமிழ்ப்புகழ் ஒளியில்

நீடு நீடு வாழ்வோம்.

வாழ்க நம் தமிழ் ஒளியெனும்

உலகச்செம்மொழி!


_________________________________________________

பணிவ‌ன்புடன் வணங்கும்

சொற்கீரன் 

எனும் இ பரமசிவன்.

கற்பக நகர்

மதுரை...625007.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக