புதன், 2 அக்டோபர், 2024

வெல்க காந்திய சுடர்.



வெல்க காந்திய சுடர்.

_______________________________________




"ஈஸ்வர அல்லா தேரே நாம்"

தேசத்தந்தையே

மேலே கண்ட வரிகளையே

மண்ணில் புதைத்து விட‌

இங்கே ஒரு கூட்டம் 

யாகம் நடத்திக்கொண்டிருக்கிறதே.

இவர்களோடும் சமரசமாகப்

போகவேண்டும் என்று

உங்கள் அகிம்சைக்கொடியை

உயர்த்திபிடித்தீர்களே.

பார்த்தீர்களா?

நம் மூவர்ணக்கொடி

ஒரு நான்கு வர்ணச்

சனாதனத்துணியாய்

"காவியம்"பேசிக்கொண்டிருக்கிற‌

கொடுங்கோன்மையை?

மதநல்லிணக்கம் சோசியலிசம் ஜனநாயகம்

சாதிகளற்ற சமத்துவ சமூகநீதி

இவற்றையெல்லாம்

ஒழித்துக்கட்டி

மனிதநேய‌ சித்தாந்தங்களையெல்லாம்

சாம்பலாக்கி விடுவது

எனும் தத்துவத்தை வெறியாக்கி தீயாக்கி

இந்த அனுமார் வாலில் கட்டி வைத்து

வலம் வருகின்ற‌

கும்பல்களே இங்கு சுதந்திரக்

கும்மி கொட்டிக்கொண்டிக்கின்றன.

இன்னும் உங்கள்

கனவின் நெருப்பு அவிந்து விடவில்லை.

மனிதம் சுடரும் அந்த‌

காந்திய ஜோதியை

ஒரு யுகப்பிரளய வெளிச்சமாக்கி

முன்னேறுவோம்

முன்னேறுவோம்

வாழ்க நம் மகாத்மா காந்தி.

வெல்க அந்த சோசியலிசக் காந்திய சுடர்.


_______________________________________________‍

சொற்கீரன்

02.10,2024

காலை 01.10 மணி


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக