ஞாயிறு, 13 அக்டோபர், 2024

என் அன்பான வாழ்த்து மடல்.

 

எண்பத்தி ஒன்றாவது வயது நிறைந்த

என் நண்பன் சிவசுப்பிரமணியனுக்கு

என் அன்பான வாழ்த்து மடல்.

________________________________________________


எங்கிருந்தோ

மூலைக்கரைப்பட்டியிலிருந்து

வந்ததாய்த் தான் 

அந்த மாணவர்கள் 

எண்ணினார்கள்.

ஆனால் கல்லூரிப்பேராசிரியர்

சொந்த ஊர் எதுவெனக்

கேட்டபோது

"திக்கெல்லாம் புகழும்

திருநெல்வேலிச் சீமை"

என்று 

முழங்கினாயே!

அன்று முதல் 

உனது அந்த 

முழக்கம் ஓயவில்லை

ஒடுங்கவில்லை.

பாட்டாளி வர்க்க சமுத்திரத்தின்

பேரலையாய்

முழங்கிக்கொண்டிருக்கிறாய்.

நூறாண்டுகள் எல்லாம் ஒரு பொருட்டா?

உன் யுகம் 

இந்த மைல்கற்களையெல்லாம்

உள்வாங்கிக்கொண்ட

பெரு வரலாறாய்

முன்னேறும் முன்னேறும்!

கல்லூரிக்காலம் எனக்கு

அறிவின் ஊற்று சுரக்கும்

பசுஞ்சோலையாக‌

இருந்ததன் இன்னொரு 

தேனூற்று

இனிய நண்பா

அது நீயே தான்.

வாழ்க என் நண்பா!

நீ நீடூழி நீடூழி வாழ்கவே!


____________________________________

அன்புடன்

செங்கீரன் எனும்

இ பரமசிவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக