செவ்வாய், 1 அக்டோபர், 2024

தமிழ் ஆற்றுத் தொகை (4)

 


 தமிழ் ஆற்றுத் தொகை (4)

________________________________

இடைக்காடன் (இ பரமசிவன்)



ஆர்கலி கொட்ப அவல்மிசை நிரக்கும்                        74

பேர்யாற்றின் திரங்கிய வெள்ளம்

அலைமேல் அலைபடு அடுக்கத்துப்

பாயும் நீரெனக்காட்டி நிரல் அனல் 

கூட்டும் பிரிதுயர் நோன்றாள் ஆயிழை

பொருள் கூட்டச் சென்றான் நோக்கி                             79

குவிச்சிறை குருகு அன்ன ஆங்கு

ஆகாக்கிடந்தாள் அவன் முகன் பார்த்து.

ஞாயிறு உறுத்து விழிப்ப அருவியின்

குரூஉத்துளி காட்டும் அவிர்வண்ணம்

அவள் மைவிழி கலைப்ப‌  மயங்கி

வணங்கு குவளை நீட்டம் மாய்ந்து                               85

நிரம்பா நீடை அவன் வரல் நோக்கும்.

மதிமலி புரிசை மல்லல் மாட‌

நகர் வீங்கு மாக்கள் மற்றும்

பைம்பூப்பழனம் அறைந்து கெடுக்கும்

அடர் மழை அவள் பளிங்குக்கண்ணீர்                         90

கண்டு மெல்லிதின் துவலை கற்ப‌

சிமைய நிமிர்ப்பின் ஓங்கல் அன்ன‌

அவன் அஃதோர் ஆறு போன்ம்

கண்ணகன் தெருவில் வீறுகொள் 

பரியின் கொய்சுவல் கலித்த‌                                            95

காட்சி உடன் படுத்தாங்கு

வாள் நிலாப் பிறையாய்

வழிப்படூஉம் மாறு நின்றனள் மன்னே.                        98



(தொடரும்)

__________________________________________________










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக