வெள்ளி, 30 செப்டம்பர், 2016

நிழல்கள்


















































நிழல்கள்
================================================ருத்ரா இ பரமசிவன் 

பூமியில் படர்ந்த மச்சங்கள்.
சூரியன் பச்சை குத்துகிறேன் என்று
பச்சை மரங்கள் வழியே
பதிந்த கிளை இடுக்குகளின்
சுவாசங்களாய் விழுந்த 
நுரையீரல் சிப்பங்கள் இந்த நிழல்கள்.
வெயிற்கேற்ற நிழலுண்டு என்ற‌
இனிய கவிதையின் 
கவிமணித்திருமுகங்கள் இவை.
போகலாம் இருங்கள்.
உங்களுக்கு கிடைக்கும்
அந்த கோடி ரூபாய்கள் அங்கே
இருக்கும் கவலை வேண்டாம்.
கோடும் கிளையுமாய்
இந்த உயிர்ச்சித்திரங்கள்
எத்தனை கோடி பெறும்.
அனுபவியுங்கள் சக பயணிகளே
அனுபவியுங்கள்!

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக