வியாழன், 1 செப்டம்பர், 2016

நெட்டைப் பகல் கனவில்.....




1 Sep 2016



நெட்டைப் பகல் கனவில்...
=====================================ருத்ரா இ.பரமசிவன்.


கபாலி

சூட்டு கோட்டுக்குள்
நெருப்பை வைத்து
தைத்தது.


காவேரி

தண்ணீர்ப்பாம்பு விளையாட்டிலும்
அவனே பாம்பு
நாமே தவளைகள்.


ரஜனி

தமிழன்
படுத்தே கிடக்க
"பஞ்ச்" போதும்.



கமல்

"மேக் அப்" போடு
கழுதையாயும் உலகின்
கவனம் ஈர்ப்பேன்.



ஜனநாயகம்

தலை குனிந்தே
மேஜைகள் தட்டினார்கள்.
சட்டம் ஆனது.



ஈஷா

அகப்பட்டால்
"இந்தியத்தாய்" கூட
"சன்யாசினி" தான்.



ஒரு கைது

சரஸ்வதியின்
வீணைக்குள்ளும்
கருப்புக்கரன்சிகளா ?



நிதி

110 ஏ யின்கீழ்.....
வாய்ப்பூட்டுகள் வாங்கியதற்கு
ரெண்டாயிரம் கோடி ஒதுக்கீடு.


ஈழம்

ஊமைகள் பேசினர்.
செவியிலிகள் கேட்டனர்
தமிழ் வாழ்க!


எதிர்க்கட்சிகள்.

குப்பைத்தொட்டிகளில்
விழுவதற்கு மட்டுமே அனுமதி
அந்த 49 விழுக்காடுகளுக்கு








நட்பைப்பற்றி ஒரு கவிதை,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக