திங்கள், 5 செப்டம்பர், 2016

வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா....





வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
==========================================ருத்ரா இ பரமசிவன்.

நம்ம நாடு சுத்த மோசங்க!
ஒழுக்கம் கெடையாது.
பக்தி கெடையாது.
எங்க பாத்தாலும்
ஈ மொய்க்கிற மாதிரி
எல்லாத்துக்கும் கூட்டம் தான்.

கீரியும் பாம்பும்
கல்யாணம் பண்ணிக்கப்போவுதுன்னு
கொட்டு அடிச்சு கூட்டம்.

புதுசா நாப்பது ரூவாய்க்கு
ஸ்மார்ட் ஃபோன் தரான்னு
எக்கச்சக்க கூட்டம்

அரை பவுன் வாங்கினா
பத்து கிராம் வெள்ளில‌
லட்சுமி டாலர் தரான்னு
எக்கச்சக்க கூட்டம்.

தமிழ் மாசமே தெரியாத
சன‌ங்களுக்கு
"ஆடித்தள்ளுப‌டி"மூலம்
தமிழ்ப்பஞ்சாங்கம்  அத்துபடி.

சினிமா பத்தி கேக்கவே வேண்டாம்.
"என்ன எழவுடா சுத்த ரோதனையாப் போச்சு"ன்னு
ஒரு படம் வந்தாக்கூட‌
அது என்னமோ "லைக்குங்களாமே"
அது அள்ளுதாம் போங்க.

அது என்னமோ தெரியலீங்க.
எல்லாம் வெவரந்தாங்க!

என்னங்கடா வேடிக்க பாக்குரீங்க‌
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடான்னு
சொன்னாங்க.
தள்ளுனா
ஆயிரம் ரெண்டாயிரம் கெடைக்கியூம்னாங்க.
அது என்ன பொணம் கொண்டுபோர
வண்டியான்னு கேட்டோமுங்க‌
கெட்ட நாத்தம்.
ஆமாண்டா!ஒங்க பொணங்க தாண்டான்னாங்க!
ஏனுங்க!
நம்ம அரசாங்கத்த நாமே தேர்ந்தெடுக்க‌
நமக்கே ரூவா தர்ராகளாமே..ன்னுட்டு தானே
வந்தோமுங்க!
அந்த எழவுக்கு
என்னதாங்க இங்க  பேரு?.
ஓ ...எலக் ஷன்ங் களா ?"

==================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக