வெள்ளி, 23 செப்டம்பர், 2016

காதலும் கத்தரிக்காயும்






காதலும் கத்தரிக்காயும்
==================================ருத்ரா இ பரமசிவன்.

காதலித்து பார்
வாழ்க்கை புரியும் என்றார்கள்
வாழ்ந்து பார்
காதல் புரியும் என்றார்கள்
காதல் வாழ்க்கை புரிந்தது.
வாழ்க்கை காதல் புரியவில்லை.
வாழ்க்கையை எப்படி காதலிப்பது?
வாழ்க்கை என்பது
ஜனன -மரணக்கணக்கு.
காதல் என்பது
மரண-ஜனனக்கணக்கு
செத்து செத்து பிறப்பது காதல்.
பிறந்து பிறந்து சாதல் வாழ்க்கை.
போதும் நிறுத்துங்கள்.
காதலும் வேண்டாம்.
கத்தரிக்காயும் வேண்டாம்.
====================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக