சனி, 13 ஆகஸ்ட், 2016

பிரம்மத்தும்மல்


Sunday, July 6, 2014 ல் எழுதியது 


பிரம்மத்தும்மல்





பிரம்மத்தும்மல்
=========================================ருத்ரா

"நானு"க்குள் பாதாளக்கரண்டியை
வீசியிருக்கிறேன்.
டாஸ்மாக்குக்குள் போய்
ஒரு குவாட்டர் கட்டிங்கில்
மனிதன் பீஸ் பீஸாய் ஆகி விடுகிறான்.
அங்கே ஊறுகாய் தொட்டுக்கிற‌
சமாச்சாரம் மாதிரி தான் இதுவும்.
ஆனா
இது ரமணா பட்டணம் பொடி.
"நான்" என்ற அந்த சொல்லின்
நமைச்சல் தாங்க முடியலே.
ஆத்மாவை இப்படி ரவை ரவையாய் ஆக்கி
அதிலும் "ஸ்ட்ரிங்" துடிப்பிழையாய் ஆக்கி
ஒரு ஹோலொகிராஃபிக் வெளியில்
குவ்வாண்டம் டெலிபோர்ஷன் மூலம்
எங்கு வேண்டுமானாலும்
போங்கள் வாங்கள்.
பெருமாளின் தொப்பூள்கொடி வழியாய் போய்
அந்த பிரம்மனை
கொஞ்சம் வெளியே அனுப்பிவைத்து
புதிய மனுஷாளை படைத்து விட்டு
அப்புறம் கிழே இறங்குங்காணும்.
இப்படியெல்லாம் தான்
ரிஷிகள் யோசித்தாள்
அந்த சோமச்செடியை நசுக்கிய‌
சாறை உறிஞ்சிய பிறகு.
அப்புறம் அவா சொல்றதுலே
பாதி பெரியவாள்.
பாதிக்கு மேலே பெரியார்வாள்.
உபநிஷதம் உபனிஷதம்னுட்டு
பொசுக்கு பொசுக்குன்னு
கூட்ஸ் வண்டி விடரேழே
பிரஹ்மம் ப்ரக்ஞான கனம்னு
ஒண்ணு வருது பாத்தேழோ
இதெ எங்க திருநெல்வெலிக்காரா
சொல்வா
"ஓர்மை"ன்னு.
பிரபஞ்சத்துக்கு ஒரு ஓர்மை உண்டு.
காலபரிமாணத்தை
தலைகீழ் வர்க்கத்துல கொண்டுபோய்
அதெ காணாம கரச்சுப்பிடுங்கோ
அப்போ
ப்ளாங்க் கான்ஸ்டாண்ட் காணாம போய்டும்.
ஆனா "ஆலன் குத்" விஞ்ஞானி சொல்றான்
அப்பொதான்
ஸ்கேல் எனும் அளவு
தாறுமாறாய் பூதாகாரமாய்
எக்ஸ்பொனென்ஷியல் உருப்பெருக்கம்
அடைகிறதாம்.
அது பிரபஞ்ச உட்கிடக்கை.
கருப்பொருள் உரிப்பொருள்
கரும்பொருள் எனும் டார்க் மேட்டராய்
ஈர்ப்புக்கு மல்லுகட்டுகிறது.
கூர்மையான அந்த ஓர்மை
மனிதன் கிழிந்த பாயில்
வாய் கோணி
வரட்டிமேல் படுக்கப்போகும் முன் கூட
குறிச்சொல் ஒலிக்குமாம்.
மனம் உடல் உயிர் வெளி ஈர்ப்பு
எல்லாம் திருக்கி முறுக்கி
பிசைந்த நாத்திக பிரசாதம் இது.
இதில்
நாராயாணனும் இல்லை.
சிவனும் இல்லை.
நியுரானும் பேர்யானும்
புணரும் நிகழ்ச்சியில்
கிராண்ட யூனிஃபிகேஷனில்
ஊளை நாயும்
உடுக்கை ஒலியும் ஒன்றிப்போகும்.
புரிகிறதா..

பி.ஹெச்டியும் இல்லை
ஒரு வெங்காயமும் இல்லை.
"நான் ஹோமோஜெனஸ் ஹைபர்ஜியாமெட்ரிக் ஃபங்ஷனுக்கு"
சூத்திரம் எழுதி வைத்து
உலகத்தையே தடலாடியாய் உருட்டித்தள்ளிவிட்டு
சுருட்டி மடக்கி படுத்துக்கொண்டு
வானத்தையே வெறித்த‌
நம் ராமானுஜனும் அந்த‌
"கருந்துளை"க்கு அப்பாலும்
தூண்டில் வீசி விளை யாடிய அற்புதங்கள்
நிறைய உண்டு போலும்
இந்த பட்டணம் பொடியில்!

சாமி என்னென்னமோ சொல்றாரே!
ஆமா
அது நாராயணயம் இல்லெ.
"நாஸா"யணம்.
நேத்து தான் சாமிஜி
பிலடெல்ஃபியாவுல லெச்சர் குடுத்துட்டு
நேரே இங்க வந்திருக்கார்.
நம்ம வூரு பத்தமடைக்காரரு தான்

புரிஞ்சுதுண்ணா
அதுக்கப்புறம்
அகத்தியன் அருவி
கல்யாணி தீர்த்தம் குடிக்கலாம் வாங்கோ.
கவிஞர் விக்கிரமாதித்தன்
அங்கே தான்
தலையை கைக்கு வச்சு
மல்லாக்கப்படுத்து
விண்வெளியில் இடுக்கி இடுக்கிப் பார்த்து
ஏதோ ஒரு "ஓரியனின்"
நாசிக்குள் மூக்குப்பொடியை
திணிச்சிட்டு
பிரம்மத்தும்மலுக்காக காத்திருக்கார்.
அவர்ட்ட மீதிய கலந்துக்கலாம்.

========================================================



2 கருத்துகள்:

Thangaraj சொன்னது…

nice post
thangaraj
vtjana07@Gmail.com
wwww.dataentryjobathome.com

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

நன்றி திரு.தங்கராஜ் அவர்களே

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக