புதன், 24 ஆகஸ்ட், 2016

"செவாலியே" கமல்

"செவாலியே" கமல்
==========================================ருத்ரா
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
என்று பால்வடியும் முகத்தில்
இன்று
நடிப்பின் "நயாகரா"அல்லவா
ஒரு பால் ஊழியின் பிரளயத்தை
அங்குலம் அங்குலமாய் காட்டுகிறது.
ஒரு "குணா" போதும்
அதிலிருந்து
ஒன்பதாயிரம் குணாக்களை
தோலுரித்துக்காட்ட வல்லவர்.
"சப்பாணியாய்"
நம்மை நிமிர்ந்து உட்கார்ந்து
பார்க்க வைத்தவர்
"உத்தம வில்லன்" வரை
நடிப்பில்
"உலகம் சுற்றி"வலம் வந்து விட்டார்.
செவாலியே கமல் என்ற
விருது
தமிழ் நாட்டைப்பொறுத்த வரைக்கும்
"செவாலியே கமல்" என்று உச்சரித்தாலும்
"சிவாஜியே கமல்" என்று உச்சரித்தாலும்
ஒரே மாதிரியாய் ஒலித்து
பூரிக்க வைக்கிறது.
எனவே அவர் பெயரின் முன்
இரண்டு "செவாலியே"க்கள்
ஒட்டிக்கொண்டது.
அவர் படங்களையெல்லாம்
பட்டியல் போட்டு
எழுதிப்பார்த்தாலே போதும்
இற்றைய நாட்களின்
"விஜய சேதுபதிகள்"எனும்
வைரப்புதையல்களை
கையில் அள்ளி மகிழலாம்.
தமிழ் நாட்டு
நடிப்புக்கலையின் செங்கோல்
இவர் கையில் இருந்து சுழல்கிறது
இருட்டுக்குள் இன்னும்
காமிரா நோக்கி தடவிக்கொண்டிருக்கும்
மாணர்களுக்கு
வெளிச்சம் காட்டும்
"கலங்கரை விளக்கமாக".
ஓங்கி வளர்க!
கமல் எனும் இக்
கலைச்சூரியனின் புகழ்!

======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக