திங்கள், 15 ஆகஸ்ட், 2016

ஆழ்ந்த நம் இரங்கல்கள்.


  புகைப்படம் :நன்றி."ஒரு ஊழியனின் குரல்"  திரு.எஸ்.ராமன் வேலூர்







ஆழ்ந்த நம் இரங்கல்கள்
===================================ருத்ரா இ பரமசிவன்

(கவி வேந்தன் நா.முத்துக்குமார் மறைவுக்கு
நம் ஆழ்ந்த இரங்கல்கள்)



வயதுகளின் நுழைவாயில்
கட்டி முடிக்கும் முன்னே
வாழ்க்கைக்கோபுரமே
சாய்ந்து விட்ட கொடுமை என்ன?

"இப்படியே விட்டால் நீ
பாட்டெழுதி பாட்டெழுதியே
நூலேணி ஏறி வந்து என்
அரியணையையும்
அபகரிக்கும் அபாயம்
வந்து விடும் என்று தான்
இப்போதே உனை நான்
எடுத்துக்கொண்டேன்
என் மடியில்"
என்றெழுதினான் ஒரு பாட்டு
இறைவனுமே!
................
இந்தப்பாட்டும்
நா(வல்ல)முத்துக்குமார்
எழுதிக்கொடுத்து
இறைவன்
கீழே வீசியது தான்.

=====================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக