புதன், 10 ஜூன், 2026

உபதேசம்

 

சங்கராச்சாரியார்

ராமானுஜாச்சாரியார்

மத்வாச்சாரியார்

இவர்கள் மூன்று பேரும்

மண்டைகளை உடைத்துக்கொண்டது

போதாதென்று

இன்னும் இந்த மக்களை

தத்துவம் சொல்லுகிறேன் என்று

வதைத்துக்கொண்டு தான்

இருந்தார்கள்.

திடீரென்று

இந்த மூவரும் காணாமல் போனார்கள்.

அது என்ன தான்

என்று

இவர்கள் விளங்கிக்கொண்டார்கள்.

ஆகா ....என்று

புரிந்து கொண்டதும்

காணாமல் மறைந்து போனார்கள்.

உபதேசம் கேட்டவர் கவுண்டமணி.

உபதேசித்தவர் செந்தில்.

உப்தேசம் ஆனது

அந்த‌

பிரம்மம்

மாயா

ஆத்மா

வாழ்க்கை எனும்

"வாழைப்பழம்" தான்!!!

____________________________________

சொற்கீரன்

_______________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக