புதன், 10 ஏப்ரல், 2019

அழிவுக்கு மற்றொரு பெயர் ஆன்மீகமா?









அழிவுக்கு மற்றொரு பெயர் ஆன்மீகமா?
===========================================================ருத்ரா


இந்த தலைப்பை படித்தபின்
உண்மையான‌
ஆன்மீகவாதிகளுக்கு
ஒரு பொறி தட்டும்.
உடலிலிருந்து
உயிரிலிருந்து
அதன் உணர்வுகளிலிருந்து
உணர்வுகள் அறியும்
அதன் உறுப்புகளிலிருந்து
ஏன்
ஜனன மரண நிழல்களிலிருந்து கூட‌
எல்லாவற்றைறையும்
அழித்துவிட்டு
நில்
அறி
உணர்
....
அதுவே ஆன்மா.
நான் யார் என்று
எல்லாத்தோலையும்
உரித்துவிட்டு
"நான்" என்பதற்கு
இலக்கணக்குறிப்பை
மட்டும் பார்.
அது "தன்மை" ஆகும்.
தன்மையை
வடமொழியில் ஆத்மா என்கின்றனர்.
இந்த உலகின்
ஒட்டுமொத்த ஆத்மா என்பது
இந்த உலகமே நான் எனும்
ஒரு பேருர்ணவு.
இதுவே இந்த உலகத்தை
இன்று வரை இயக்கிக்கொண்டிருக்கிறது.
அந்த ஆத்மா மறைந்து போதல்தான்
"மோட்சம்" என்று
இந்து மதம் கொண்டாடுகிறது.
மறு பிறவி கிடையாது!
இனி மனிதப்பிறவியே கூடாது!
பிறவிச்சங்கிலி அறுக்கப்பட வேண்டும்.
என்று
மொத்தமாய் ஒரு "பெரிய சங்கு"
ஊதுவதே "மோட்சம்" ஆகும்.
இந்த உலகம் முழுதும்
ஒரு மயானம் ஆகி விடுதல்
எனும் நிகழ்வு தான் இது.
பிறப்பை நிறுத்து.
பிறப்புக்கு காரணமான‌
கர்ப்பம் தாங்கும்
பெண்மீது மோகம் கொள்ளாதே.
பெண் தான்
உன் மோட்சத்திற்கு
தடைக்கல் என்று உணர்.
உயிர்கள் அற்ற உலகம் தான்
மோட்சம் என்று ஆகிறது.
ஓம் என்பது
அகரம் உகரம் மகரம்
என்ற மூன்று ஒலிப்புகளின்
சேர்க்கை.
புறநிலை (ஜாக்ரதம்)
அகநிலை (ஸ்வப்னம்)
புறமும் அகமும் கலந்த நிலை.("ஸுஷுப்தி")
இந்த மூன்றில்
நம் வாழ்க்கை
நம் நம்பிக்கை மற்றும் கற்பனைகள்
நம் வாழ்க்கையிலேயே
வாழ்க்கையை வெறுக்கும் நிலையும்
கலந்த நிலை
ஆகியவை அடங்கும்.
இந்த மூன்று நிலைகளையும்
கழற்றியெறிந்த
துரியம் எனும் நான்காவது நிலைக்கு
நீ பாய்ச்சல் செய்யவேண்டும்.
அந்த சமாதி எனும் விறைத்த நிலையில்
ஆத்மா என்பதும் பிரம்மம் என்பதும்
ஒன்றாகி விடுகிறது.
அங்கு
உயிர் இல்லை
உடல் இல்லை
உணர்வுகள் இல்லை.
அறிவு இல்லை..
ஜீவாத்மா இல்லை
பரமாத்மா இல்லை.
கடவுளே இல்லை.

அது என்ன?
அட போங்கடா !


அது தான் ஆயிரம் ஆயிரம்
ஹிரோஷிமா நாகசாகிகளின்
பேரழிவு நிலை.
நம் பிரபஞ்சத்தில்
கோடி கோடி விண்மீன் மண்டலங்கள்
உள்ளன.
அந்தகோடி கோடி கோடி..கோடி
துளியிலும் துளியாய் உள்ள‌
இந்த பூமியில் தான்
உயிர் இருக்கிறது.
இதையும் சுடுகாடு ஆக்கிவிடு
என்று
ஒரு மதம் போதிக்குமானால்......
அதன் அழிவு ஆயுதமாக‌
ஆயிரம் ஆயிரம் டன்களின்
அணுகுண்டு போன்ற ஒரு
சொல்லாக
அந்த "ஆன்மீக மோட்சம்"
இருக்குமானால்.........
இந்து மதம் அதில் தான்
ஆணி அடித்துக்கொண்டிருக்கிறது
என்பதும்
போதிக்கப்படுமானால்.........
.................
..................
உங்கள் அழிவிலிருந்து
உங்களைக்காத்துக்கொள்ள‌
தேவைப்படுகிறது
ஒரு அறிவு.
ஆம்..
அழிவை போதிக்கும்
மதங்கள் தேவையில்லை
என்ற ஒரு அறிவு.
எல்லா மனித உயிர்களையும்
இப்படி பலி வாங்குபவர்
கடவுள் இல்லை.
மனிதனே இப்படி தன்னைத்தானே
அச்சுறுத்திக்கொள்ள
தன் கற்பனையில் படைத்துக்கொள்ளும்
அந்தக்
கடவுள் இல்லவே இல்லை.
........
கடவுள்
இல்லவே இல்லை.
இல்லவே இல்லை
இல்லவே இல்லை.
...............
இதோ அறிவு சுடர் வீசுகிறது

=======================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக