வியாழன், 25 ஏப்ரல், 2019

திராவிடம் என்பது...

திராவிடம் என்பது...
=================================================ருத்ரா

திராவிடம் என்பது
தமிழ் மொழியின் ஒரு
வரலாற்று வெளிச்சம்.
அது ஒன்றும் சமஸ்கிருத‌
வேர்ச்சொல் அல்ல.
திரை என்னும் கடல் அலை
கடந்து தன் சுடர் காட்டிய‌
தமிழனின் திறம் காட்டும்
சொல் அது.
சமஸ்கிருதம் என்ற சொல்லுக்குள்ளேயே
தமிழ் மொழிச்சாறு தான்
இறங்கியிருக்கிறது.
பல மொழி ஒலிப்புகளை
திரட்டிக்கொண்டுவந்தவன்
தமிழன்.
திரை கடலோடிக் கொணர்ந்த
அந்த பல் மொழிக்கு
சமமாக தமிழை அவன்
ஆக்கியிருப்பதே சமஸ்கிருதம்.
கரம் என்ற தமிழ்ச்சொல்
கையைக்குறிக்கிறது.
எல்லா செயல்களும்
கையின் வழியே வெளிப்படுவதே
கிருதம் எனப்படும்.
உலகம் சுற்றி அவன் கொணர்ந்த‌
பல ஒலிப்புகளையும்
தமிழ் இழையில் கோர்த்து
உருவாக்கியதே சமஸ்கிருதம்.
தமிழன் உருவாக்கிய இந்த மொழி
தமிழோடு ஒட்டாமல் நின்றது.
தமிழ் பேசிய‌
சேர சோழ பாண்டியர்களே
ஒருவருக்கொருவர்
வெட்டிச்சாய்த்துக்கொள்வதே
வீரம் மானம் என்று
போற்றப்பட்ட போது
தமிழன் ஆக்கிய அந்த "அயல் தமிழ்"
எப்படி தமிழோடு இழையும்.
தமிழ் மொழியில்
"ஆர்" என்ற சிறப்பு விகுதி
மற்றும் உயர் தனி உரிச்சொல்
அயல் தமிழுக்கு
ஆர் இயல் தமிழ் ஆகி
ஆரியத்தமிழ் ஆனது.
இப்போது பாருங்கள்
தமிழே
சமஸ்கிருதமாகி
"ஆர்க்கும் இனத்தவரின்
அதாவது ஆரிய இனத்தவரின்
மொழியாகி
தமிழை அழிக்க வெறிகொண்டு
வருகிறது.
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின்
ஆராய்ச்சிப்பாதையில்
சென்றால்
தமிழிலிருந்து உருவானதே
சமஸ்கிருதம் என்பது
புலனாகும்.
திராவிடத்தின்
அதாவது "திரையிடத்தின்"
(கடலும் கடல் சார்ந்த இடமும்)
வரலாற்று வெளிச்சம் புரியும்.
நம் சங்கத்தமிழ் இந்த‌
நெய்தல் நிலத்தவனை
"பரதவன் அல்லது பரதன்"
என்று அழைக்கிறது.
பரவை என்ற சொல் கடலைக்குறிக்கும்.
பரதன் என்னும் சொல் அந்த‌
பரவையிலிடுந்து தான் வந்திருக்கும்.
நம் இந்தியாவே "பரதகண்டம்" தான்.
வியாசர் எனும் பரதவரே
மகாபாரதம் எழுதினார்.
சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும்
பிறந்தவன் தானே பரதன்
என்பீர்கள்!
ஆனால் சகுந்தலையின் ஞாபகமே
துஷ்யந்தனுக்கு தொலைந்து போன போது
ஒரு செம்படவன் (பரதன்)
பிடித்த மீன் வயிற்று மோதிரம் தானே
சகுந்தலையையும் துஷ்யந்தனையும்
சேர்த்தது.
ஒரு பரத(வ)ன் உதவியால்
பிறந்த குழந்தைக்கு
"பரதன்" என்று அவர்கள்
பெயர் சூட்டியிருக்கலாம்.

அதனால் இப்போது
இந்தியாவின்(பரதா கண்டத்தின்)
தேசிய மொழி
என்னும் செம்மொழி
நம் தமிழ் மொழி தான்
என்று உரிமைக்குரல்கள்
எழுப்பும் நேரம் வந்து விட்டது.
மொழி ஆராய்ச்சியாளர்களே
உங்கள்
சிண்டைப்பிய்த்துக்கொள்ளும்
நேரமும் வந்து விட்டது.

====================================================

என்ன இப்படியெல்லாம் எழுதுகிறீர்களே
என்று கேட்கிறீர்களா?
சிவன் தன் மூத்த  புதல்வனின்
தலை வெட்டப்பட்டுவிட்டபோது
யானைத்தலையை ஒட்டவைத்து
"பிளாஸ்டிக் சர்ஜரி" செய்தார் என்று
"விஞ்ஞான  பூர்வமான புராணம்"
அவர்கள் எழுதத்துவங்கி விட்ட போது
நாம் நம் தமிழின் ஆராய்ச் சியை
இப்படியெல்லாம் தான் எழுதவேண்டும்.

========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக