ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

வைர ஊசி

வைர ஊசி
======================================ருத்ரா

வைக்கோல் படப்பில்
வைர ஊசி ஒன்று
விழுந்ததாய்
ஒரு நாள் நள்ளிரவில்
கொடியேற்றிச்சொன்னார்கள்.
அப்போது முதல்
தேடும் படலம் தான்.
வைக்கோல் படப்பை
கலைத்து கலைத்து தேடினோம்.
மீண்டும் கட்டிவைத்தோம்.
மீண்டும் கலைத்தோம்.
மீண்டும் மீண்டும்
தேடிக்கொண்டிருக்கிறோம்.
தேடும்போது
கிடைத்தவை இவை தான்.
கட்சிகள்.
சித்தாந்தங்கள்.
ஊழல்கள்.
எரிந்து போன மனிதத்தின்
மிச்சங்களாய்
சாதி மதங்கள்.
வெள்ளை வெள்ளையாய்
பூணூல் போட்டுக்கொண்டு
அவதாரங்கள்.
சிங்க முக மனித வடிவில்
அதர்மத்தின் குடல் கிழிப்பதாய்
நடந்த புராணக்காட்சியிலும்
அந்த சிங்கத்தலை மனித மார்பிலும்
குறுக்காய் ஒரு பூணூல்.
இந்த கும்பமேளாக்கும்பல்களின்
கால் தடங்களிலும்
காணவில்லை
அந்த வைர‌ ஊசியை.

============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக