செவ்வாய், 2 ஏப்ரல், 2019

இங்கு யாருக்கும் வெட்கமில்லை.


இங்கு யாருக்கும் வெட்கமில்லை.
=======================================================ருத்ரா

என்ன இது?
தெரியவில்லை.
இடியாப்ப சிக்கலின்
ஒரு மூவர்ணப்படம் என்று
தெரிகிறது.
சிக்கலுக்குள்
நான்கு வர்ணமும்
தெரிகிறது.
யாருக்கோ அவசர அவசரமாய்
அதாவது
அறுபது எழுபது ஆண்டுகளாக
எப்படியேனும்
ஒரு சட்டையை தைத்து
போட்டு விடவேண்டும் என்ற
துடிப்பு மட்டும் தெரிகிறது.
ஆனால்
துடிக்க வேண்டிய
இதயத்தின் இடத்தில்
இதயம் இல்லை.
சிந்திக்க வேண்டிய
அறிவின் இடத்தில்
அறிவு இல்லை.
ருசி பிடித்த நாக்கு
வெறி பிடித்து நீண்டு கொண்டே
இருக்கிறது.
கரன்சிகளைக் கொடு கொடு
என்கிறது.
அலுவலக நாற்காலிகள் எல்லாம்
இந்த நாக்குகள் தான்.
ஆளும் எந்திரமோ
மொத்தமான குத்தகைக்கு
குந்தி உட்கார்ந்திருக்கிறது.
அதற்குள்
என்ன அவசரம் இந்த சட்டைக்கு?

என்ன?
நிர்வாணமாக இருக்கின்றதா?
இருந்து விட்டுபோகிறது....
இந்த "ஜனநாயகம்".
யாருக்கென்ன?
இங்கு யாருக்கும் வெட்கமில்லை.

====================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக