வெள்ளி, 12 ஏப்ரல், 2019

குரல்கள்





குரல்கள்
========================================ருத்ரா

இந்த தென்னை மரங்கள்
என்ன சொல்கின்றன ?
தாகம் என்று துடித்தீர்களே
மண்ணுக்குள்ளிருந்து
வந்த லாவா
என்று
கோப்பையை நீட்டியது.
என்
வேர்த்தூவிகளில் கூட
தமிழனின் ரத்தம் தான்.
அடியில்
புழுக்களால் தின்னப்படமுடியாத
அந்த எலும்பு மஜ்ஜைகளுக்குள்ளும்
தமிழ் எழுத்துக்கள்
இன்னும்
சூரியனைத்தான்
பிழிந்து குடித்துக்கொண்டிருக்கின்றன.
இந்த பச்சைக்கீற்றுகளின் குரல்கள்
உங்களுக்கு கேட்கவில்லையா ?
அவற்றின் சிவப்பு வானக்கீறல்கள்
இந்த இருட்டைக்கிழிக்கும் வரை
தமிழின் இந்த
குரல்களே எங்கள் தாகங்கள்.

============================================
18.05.2015


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக