திங்கள், 8 ஏப்ரல், 2019

பட்டன் தட்டுதல்

பட்டன் தட்டுதல்
=============================================ருத்ரா
 (ஒரு நெட்டைக்கனவு)


இது
தேர்தல்
கணிப்பொறியில்
பட்டன் தட்டுதல்  எனும்
உற்சவம் .

இந்த சடங்கு
சம்பிரதாயங்கள்
ஒரு பத்து நாளில்
துவங்கி விடும்.

யார்கண்டது?
அந்த வரிசையில்
பிரம்மாவும்
நாரதரும் கூட‌
நின்று கொண்டிருப்பார்கள்.

நாரதர் கேட்பார்
பிரம்மனிடம்.
ஏங்காணும்
உமக்கும் கூட‌
த‌லையெழுத்தா?

ஆம்.நாரதா.
எல்லாவற்றுக்கும்
நான் தான்
குடும்பத்தலைவனாம்.

சிஸ்டத்தில்
ஏற்றிவிட்டார்கள்.
நானும் கீழே
இறங்கி வந்துட்டேன்.

ஆம்
வரிசையும்
துவங்கி விட்டது.
நாரதரும்
பிரம்மாவும்
நிற்கிறார்கள்.

பிரம்மா
கிசு கிசுக்கிறார்.
"நாரதா அங்கே பார்"
அங்கே
பார்த்தால்
எருமைக்கொம்பு
கிரீடத்தில்
மினு மினு என்று
ஒருவர்
பாசக்கயிற்றுடன்.

நாரதருக்கு
ஆச்சரியம்
"என்ன சாமிகளே
ஒண்ணும்
புரியலையே ."

பிரம்மா
மறுபடியும்
நாரதர் காதை
கடித்தார்
நாரதர் முகத்தில்
மில்லியன் வாட்ஸ்
பல்பு வெளிச்சம்.
என்ன
அப்படியா
என்றார்.

வாக்காளர்கள்
வரிசை
நகர்ந்து கொண்டே
இருந்தது.
சதவீத கணக்கில்
பார்த்தால்
அது
ஆயிரம் பத்தாயிரம்
சதவீதம் போல்
இருக்கும்.
ஊடகங்கள்
வியப்பின் உச்சியில்
உடைந்து நொறுங்கி
தூளாகிக்
கூழாகின.

என்ன நடக்கிறது?
என்ன நடந்தது?
என்ன நடக்கும்?

மயில் பீலி
கிரீடம் ஆட
புல்லாங்குழலும்  ஆட
கிருஷ்ணன்
சிரித்தான்.

எல்லாரும்
கன்னத்தில்
போட்டுக்கொண்டார்கள்.
..........
............
தேர்தல் முடிவு?
என்ன?
தெரியவில்லை.
அரசியல் சட்டம்
வளைந்து நெளிந்து
கிடக்கிறது.

உச்சநீதி மன்றம்
மொத்த  நீதிபதிகளையும்
சேர்த்து
பெஞ்சாக்கி
தீர்ப்பு சொல்வதற்குள்
விழி பிதுங்கி விட்டது.


"ரிசல்ட்
எல்லா பூத் களிலும்
ஜீரோ என்று
முட்டை முட்டையாய்
குவிந்து காட்டுகிறது.
ஒருவருமே
ஓட்டு போடவில்லை.
நோட்டாவும்  கூட
"முட்டையோ முட்டை"
என்ன இது?
எப்படி இப்படி?

"நீதி மன்றம்
தீர்ப்பு அளித்து விட்டது.
இது குழப்பத்தையும்
அராஜகத்தையும்
கொண்டு வந்து விடும்.
ஆம் ..
இது ஜீரோ ரூல்.
இது நம் தேசத்துக்கு ஆபத்து.
என்ன செய்வது?"

.....(தொடரும்)








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக