திங்கள், 8 ஏப்ரல், 2019

வாயில்லாப்பூச்சி




வாயில்லாப்பூச்சி
====================================ருத்ரா

உன்னை
வானவில் என்றால்
பச்சோந்தியா நான்
என்பாய்?
பட்டாம்பூச்சி என்றால்
பட்டுப்போனவளா என்பாய்?
பவள மல்லி என்றால்
அவளா உனக்கு
சொல்லிக்கொடுத்தாள்
என்பாய்?
மென்மையின் உருவமே !
அனிச்சமே என்றேன்.
அன்னியத்தனமாய்
இருக்கிறது என்கிறாய்.
எதுவும் சொல்லமாட்டேன்
என்று
நின்று கொண்டேஇருந்தேன். 
வாயில்லாபூச்சி
எனக்கு வேண்டாம்
என்று போய் விட்டாயே!

=========================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக